News April 23, 2025
தமிழக அரசுடன் மோதல் போக்கு இல்லை: ராஜ்பவன் விளக்கம்

துணை வேந்தர்கள் மாநாடு தொடர்பாக தமிழக அரசுடன் அதிகார மோதல் இல்லை என ராஜ்பவன் விளக்கம் அளித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புடன் ஒப்பீட்டு துணை வேந்தர்கள் மாநாட்டை அதிகார மோதல் என சொல்வது தவறு எனவும் கவர்னர் மாளிகை குறிப்பிட்டுள்ளது. மாநாட்டுப் பணிகள் சில மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டதாகவும், சில ஊடங்கள் இருவருக்கும் மோதல் என தவறான தகவலை கூறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 27, 2025
வடமாநில தொழிலாளர்களுக்கு அனுமதிச்சீட்டு: NTK தீர்மானம்!

நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சென்னை திருவேற்காட்டில் இன்று சீமான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு, பஞ்சமி நிலங்கள் மீட்பு, SIR-க்கு எதிர்ப்பு, வடமாநில தொழிலாளர்களுக்கு உள் நுழைவு அனுமதிச்சீட்டு தேவை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என குறிப்பிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கவனம் பெற்றுள்ளன.
News December 27, 2025
இந்தியாவில் போலி ரேபிஸ் தடுப்பூசியா?

இந்தியாவில் ரேபிஸ் நோய்த் தடுப்புக்காக ‘Abhayrab’ தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியின் போலி தொகுப்புகள் புழக்கத்தில் உள்ளதாக ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 2023, நவ.1-ம் தேதி முதல் இந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்கள், ஆஸி.,-யில் பதிவு செய்யப்பட்ட மாற்று தடுப்பூசியை போட்டுக்கொள்ளவும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
News December 27, 2025
முக்கிய ஆலோசனையில் காங்., காரிய கமிட்டி (PHOTOS)

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் ராகுல், சோனியா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியுடன் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படும் சசி தாரூரும் கூட்டத்தில் பங்கேற்றார். இதில் நேஷனல் ஹெரால்டு வழக்கு, ஆரவல்லி பகுதி பிரச்னைகள், MGNREGA திட்டத்தில் மாற்றம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


