News April 23, 2025
தமிழக அரசுடன் மோதல் போக்கு இல்லை: ராஜ்பவன் விளக்கம்

துணை வேந்தர்கள் மாநாடு தொடர்பாக தமிழக அரசுடன் அதிகார மோதல் இல்லை என ராஜ்பவன் விளக்கம் அளித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புடன் ஒப்பீட்டு துணை வேந்தர்கள் மாநாட்டை அதிகார மோதல் என சொல்வது தவறு எனவும் கவர்னர் மாளிகை குறிப்பிட்டுள்ளது. மாநாட்டுப் பணிகள் சில மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டதாகவும், சில ஊடங்கள் இருவருக்கும் மோதல் என தவறான தகவலை கூறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 20, 2025
40 லட்சம் இஸ்லாமிய வாக்காளர்கள் நீக்கம்: சீமான்

ஆட்சியாளர்களுக்கு தேவையில்லாத வாக்குகளை நீக்குவதே SIR பணி என்று சீமான் சாடியுள்ளார். தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 40 லட்சம் வாக்காளர்கள் இஸ்லாமியர்களாக இருக்கலாம் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்பெல்லாம் வாக்காளர்கள் ஆட்சியாளர்களை தேர்வு செய்தனர் என்றும், தற்போது ஆட்சியாளர்கள் தங்களது வாக்காளர்களை தேர்வு செய்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 20, 2025
பூமியின் முதல் உயிரினம் எது தெரியுமா?

பூமியில் மனிதர்கள், டைனோசர்களுக்கு பல கோடி ஆண்டுகள் முன்பே தோன்றிய முதல் உயிரினம் பற்றிய கேள்விக்கு விடை தேடி வந்த விஞ்ஞானிகள், ஓமன் மற்றும் இந்திய பாறைகளில் ஒரு வியக்க வைக்கும் உண்மையை கண்டறிந்தனர். கடல்களில் உள்ள கடற்பஞ்சுகளின் மூதாதையர்கள் தான் பூமியின் முதல் விலங்குகள் என்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். சுமார் 54.1 கோடி ஆண்டுகளுக்கு முன்பே இவை கடலில் வாழ்ந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
News December 20, 2025
PM மோடியின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல்!

மேற்கு வங்க மாநிலம் தாஹேர்பூருக்கு புறப்பட்ட PM மோடியின் ஹெலிகாப்டர் மீண்டும் கொல்கத்தா திரும்பியுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் பாதுகாப்பு கருதி ஹெலிகாப்டர் திருப்பி விடப்பட்டுள்ளது. முன்னதாக தாஹேர்பூரில் நடைபெறவுள்ள பாஜகவின் பொதுக்கூட்டத்திற்கு சென்ற <<18621174>>பாஜக தொண்டர்கள் 4 பேர்<<>> ரயில் மோதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


