News April 23, 2025
தமிழக அரசுடன் மோதல் போக்கு இல்லை: ராஜ்பவன் விளக்கம்

துணை வேந்தர்கள் மாநாடு தொடர்பாக தமிழக அரசுடன் அதிகார மோதல் இல்லை என ராஜ்பவன் விளக்கம் அளித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புடன் ஒப்பீட்டு துணை வேந்தர்கள் மாநாட்டை அதிகார மோதல் என சொல்வது தவறு எனவும் கவர்னர் மாளிகை குறிப்பிட்டுள்ளது. மாநாட்டுப் பணிகள் சில மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டதாகவும், சில ஊடங்கள் இருவருக்கும் மோதல் என தவறான தகவலை கூறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 14, 2025
குடற்புழுக்கள் வராமல் தடுக்க இதை பண்ணுங்க!

அசுத்தமான நீர் அல்லது உணவை உட்கொள்வது, சுகாதாரமற்ற கழிப்பறையை பயன்படுத்துவதால் குடற்புழுக்கள் உருவாகின்றன. இதனால் வயிற்றுவலி, வாந்தி, மலச்சிக்கல் ஏற்படும். இதைத் தடுக்க நாம் *நகங்களை சரியாக வெட்ட வேண்டும் *டவல்களை சூடான நீரில் சுத்தம் செய்தல் *அசுத்தமான இடங்களில் வெறும் காலில் நடப்பதை தவிர்த்தல் *செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்துதல் *சுகாதாரமற்ற இடங்களில் காய்கறிகள் வாங்குவதை தவிருங்கள்.
News December 14, 2025
BREAKING: புதிய கட்சியை தொடங்கினார் ஓபிஎஸ்

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை, கழகமாக OPS மாற்றியுள்ளார். மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் டிச.23-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும். இதில், அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுவரை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என அறிக்கை வெளியிட்ட OPS, அதனை அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் (கட்சி) என மாற்றியுள்ளார்.
News December 14, 2025
75 புதுமுக வேட்பாளர்களை களமிறக்குகிறாரா EPS?

2026-ல் குறைந்தது 175 இடங்களில் அதிமுக போட்டியிட வேண்டும் என EPS கணக்கு போட்டுள்ளாராம். குறிப்பாக, மூத்த தலைவர்களுக்கு விரும்பும் தொகுதியில் சீட் கொடுத்து சமரசம் செய்யும் அவர், தனக்கு விசுவாசிகளாக இருக்கும் சுமார் 75 புதுமுக வேட்பாளர்களை களமிறக்கவும் திட்டமிட்டுள்ளார். தொங்கு சட்டசபை உருவாகும் நிலை ஏற்பட்டால், MLA-க்கள் விலை போய்விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


