News April 21, 2025
போரிடுவதை தவிர வேறு வழியில்லை: இஸ்ரேல் பிரதமர்

காசா மீதான தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தி இருக்கும் இஸ்ரேல், போரிடுவதை தவிர வேறு வழியில்லை எனத் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 51,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஹமாஸ் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை போரை முடிவுக்கு வர முடியாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காசா மக்களுக்கு என்றுதான் விடிவுகாலம் வருமோ?
Similar News
News April 21, 2025
3 நாள்கள் விடுமுறைக்கு பிறகு கூடும் சட்டப்பேரவை!

3 நாள்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. காலை 9:30 மணிக்கு பேரவைக் கூடியதும் கேள்வி நேரம் நடைபெறவுள்ளது. அதன்பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கைகள் மீது நடைபெறும் விவாதங்களுக்கு அத்துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.
News April 21, 2025
வெயில் கொளுத்தும்.. வெளியே வராதீர்

அடுத்த 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என IMD எச்சரித்துள்ளது. வட தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், வெளியில் செல்வோருக்கு அசவுகரியம் ஏற்படக்கூடும். எனவே, மதியம் 11 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அதிகளவில் தண்ணீர், மோர், இளநீர் போன்றவற்றை குடிக்க வேண்டும்.
News April 21, 2025
கூட்டணிக்கு ‘நோ’ சொன்ன முதல்வர்.. பாமக திட்டம் என்ன?

திமுக கூட்டணியில் பாமக இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். திமுக கூட்டணியில் தற்போதைய நிலையே தொடரும் என்று விளக்கியுள்ளதன் மூலம் புதியவர்களுக்கு இடமில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கருத்து கூறி வருகின்றனர். இதனால் பாமக, அதிமுக கூட்டணியில் இணையவே அதிக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?