News March 16, 2024
வேட்புமனு தாக்கல் தொடங்க 4 நாள்களே உள்ளன

மக்களவைத் தேர்தலுக்கு தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் தொடங்க இன்னும் 4 நாள்களே உள்ளன. முதல்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. அதன்படி வருகிற 20ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. மனு தாக்கலுக்கு 27ஆம் தேதி கடைசி நாள். மனு மீது 28ஆம் தேதி பரிசீலனை நடைபெறுகிறது. மனுவை திரும்ப பெற 30ஆம் தேதி கடைசி நாள். ஏப்ரல் 19ல் தேர்தலும், ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
Similar News
News November 15, 2025
Sports Roundup: வில்வித்தையில் இந்தியா அபாரம்

*அயர்லாந்திற்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேசம் 47 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி. *Kumamoto மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் அரையிறுதிக்கு லக்ஷயா சென் தகுதி. *ஆசிய வில்வித்தையில் 6 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என 10 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம். *இலங்கைக்கு எதிரான 2-வது ODI-ல் பாகிஸ்தான் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி. *KKR வீரர் மயங்க் மார்கண்டே, MI அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளார்.
News November 15, 2025
சறுக்கலில் இருந்து சாதனைக்கு

ராம்விலாஸ் பாஸ்வானின் வாரிசு என்றாலும், 2020 தேர்தலில் பெற்ற படுதோல்வி சிராக் பாஸ்வானின் அரசியலுக்கு முடிவுரை எழுதிவிட்டதாகவே பலரும் கணித்தனர். ஆனால், 2024 எம்பி தேர்தலில் பாஜகவிடம் போராடி 5 தொகுதிகள் வாங்கி, ஐந்திலும் வென்று நான் திரும்ப வந்துட்டேன் என்றார். இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலிலும் போராடி தான் 29 தொகுதிகள் பெற்றார். அதில் 19-ல் முன்னிலை பெற்றிருக்கிறது சிராக்கின் LJP(RV) கட்சி.
News November 15, 2025
பிஹாரில் 200+ இடங்களில் NDA வெற்றி

பிஹார் தேர்தலில் NDA கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. EC வெளியிட்டுள்ள முடிவுகளின்படி BJP 89, JD(U) 85, LJP (ராம் விலாஸ்) 19 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. MGB கூட்டணியில் RJD 24, காங்கிரஸ் 6 இடங்களை கைப்பற்றியுள்ளன. ஓவைசியின் AIMIM 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் ஒரு இடத்தை கூட கைப்பற்றவில்லை.


