News May 8, 2024
இதிலும் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம்

தமிழ்நாட்டில் ஏப்.30ம் தேதி வரை 24,74,985 ஆண்கள், 28,98,847 பெண்கள், 284 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 53.74 லட்சம் பேர், அரசு வேலைக்காகப் பதிவுச் செய்து காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதிற்குள் 10,69,609 பேர், 19 – 30 வயதுக்குள் 23,62,129 பேர், 31 -45 வயதுக்குள் 16,94,518 பேர், 46 – 60 வயதுக்குள் 2,40,537 பேர், 60 வயதிற்கும் மேற்பட்டோர் 7,323 பேர் வேலைக்காகக் காத்திருக்கின்றனர்.
Similar News
News August 19, 2025
CP ராதாகிருஷ்ணன் Vs சுதர்சன் ரெட்டி.. யாருக்கு வெற்றி?

துணை ஜனாதிபதி ரேஸில் தென்னிந்தியர்கள் இருவர் மோதுகின்றனர். தற்போதுள்ள நிலவரப்படி NDA-வின் CP ராதாகிருஷ்ணனுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாகும். லோக்சபா, ராஜ்யசபா 2 அவைகளிலும் 782 பேர் உள்ளனர். இதில், 6 இடங்கள் காலியாக உள்ளன. LS-ல் NDA-வுக்கு 293, INDIA-வுக்கு 249 MP-க்கள் உள்ளனர். RS-ல் NDA-வுக்கு 130 MP-க்கள் உள்ளனர். இதனால் வெற்றிக்கு தேவையான 392-ஐ விட NDA அதிக வாக்குகளை பெற வாய்ப்புள்ளது. SHARE IT.
News August 19, 2025
வார விடுமுறை.. ஸ்பெஷல் பஸ்கள் அறிவிப்பு

வார விடுமுறையையொட்டி ஆக. 22, 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு பஸ்களை TNSTC அறிவித்துள்ளது. அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து தி.மலை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கும், கோயம்பேட்டிலிருந்து நாகை, ஓசூர், பெங்களூருவுக்கும் இயக்கப்பட உள்ளன. பிற நகரங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. www.tnstc.in இணையதளம், TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். SHARE IT.
News August 19, 2025
ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க கேமிங் மசோதா அறிமுகம்

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க மக்களவையில் கேமிங் மசோதா நாளை அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தில் ஏராளமான மோசடிகள் தொடர்ந்து அரங்கேறும் நிலையில் அதை தண்டனைக்குரிய குற்றமாக குறிப்பிட்டு PM மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் கேமிங் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரபலங்கள் ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரப்படுத்த கூடாது. இதற்கு ஏற்கனவே 28% ஜிஎஸ்டி வரி உள்ளது.