News April 4, 2025
₹17.8 லட்சம் கோடியை இழந்த உலக பணக்காரர்கள்

ஏறக்குறைய ஒரு வர்த்தக போரையே தொடங்கி இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அவரது புதிய வரிவிதிப்பு அமலான முதல் நாளே, உலக பணக்காரர்கள் விழிபிதுங்கியுள்ளனர். இன்று மட்டும் ₹17.8 லட்சம் கோடியை அவர்கள் இழந்துள்ளனர். இதில், முக்கியமாக மார்க் ஜுக்கர்பெர்க் ₹1.53 லட்சம் கோடியும், ஜெஃப் பெசோஸ் ₹1.36 லட்சம் கோடியையும் எலான் மஸ்க் ₹94 ஆயிரம் கோடியையும் இழந்துள்ளனர். இன்னும் என்னென்ன நடக்குமோ?
Similar News
News November 19, 2025
SIR பணிகளை முடக்க திமுக சதி: பாஜக

SIR-ஐ எதிர்த்து வருவாய் துறை சங்கங்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் பின்னணியில் திமுக இருப்பதாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி குற்றஞ்சாட்டியுள்ளார். SIR பணிகளில் அரசு ஊழியர்கள் ஒத்துழைக்கவில்லை எனில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது. ஆனால், நடவடிக்கை எடுக்காமல், SIR பணிகள் தடைபட வேண்டும் என நினைப்பது ஜனநாயக விரோத செயல் என்றும் சாடியுள்ளார்.
News November 19, 2025
BREAKING: சென்னையில் 10 இடங்களில் ED ரெய்டு

சென்னையில் சவுகார்பேட்டை, கோடம்பாக்கம், அம்பத்தூர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாலை முதலே ED அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
News November 19, 2025
ஊளையிடும் நரிக்கு பதில் சொல்ல வேண்டுமா? வைகோ

பல நூறு கோடி சொத்துகளை வைகோ குவித்து விட்டதாக மதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட மல்லை சத்யா குற்றஞ்சாட்டி இருந்தார். இதற்கு பதிலளித்த வைகோ, செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவன் நான். அரசியலுக்கு வந்து பல சொத்துக்களை இழந்திருக்கிறேன். புனித இலக்கை நோக்கிய நெடுந்தூர பயணத்தில் இருக்கிறேன். அப்போது, ஒரு நரி ஊளையிட்டால் அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்


