News April 4, 2024
உலகின் மிக வயதான மனிதர் காலமானார்

உலகின் வயதான மனிதர் என்று கின்னஸ் உலக சாதனை படைத்த வெனிசுலாவின் ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா (114) மரணமடைந்துள்ளார். ஜுவான் 1909 மே 27-இல் பிறந்தார். இவர், 11 குழந்தைகளுக்கு தந்தையாவார். 2022 நிலவரப்படி அவருக்கு 41 பேரக் குழந்தைகள், 30 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர். கடந்த 2022, பிப். 4 அன்று உலகின் வயதான மனிதர் என்று கின்னஸ் சாதனை அமைப்பு அவரை அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2025
அமித் ஷாவின் ஹெல்த் டிப்ஸ்.. இதை மட்டும் ஃபாலோ பண்ணா!

உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர் அமித் ஷா, சில ஹெல்த் டிப்ஸ்களை வழங்கியுள்ளார். தினமும் 2 மணி நேரம் உடற்பயிற்சி, 6 மணி நேர தூக்கத்தை கடைபிடைத்தால் உடல் ஆரோக்யமாக இருக்கும் எனவும், கடந்த 4 ஆண்டுகளாக இதை ஃபாலோ செய்து உடல் எடை, சர்க்கரை நோயில் இருந்து மீண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வயதிலும் எந்த மாத்திரைகளையும் எடுத்து கொள்வதில்லை எனவும் கூறியுள்ளார்.
News April 20, 2025
விஜய்க்கு போட்டியாக அஜித் படம் ரீ-ரிலீஸ்

பழைய படங்களை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து கல்லா கட்டி வருகின்றனர். ‘கில்லி’, ‘சச்சின்’ போன்ற படங்கள் எதிர்பார்த்ததை விட வசூலை வாரிக்குவித்தன. அந்த வகையில், நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு மே 1-ம் தேதி ‘வீரம்’ படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ‘சச்சின்’ படத்தை போலவே நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு ரிலீசாகிறது. கடந்த 2014-ல் வெளியான இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார்.
News April 20, 2025
மதிமுகவில் பற்றி எரியும் புகைச்சல்

மதிமுக நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறும் நிலையில் மல்லை சத்யாவுக்கும், துரை வைகோவுக்கும் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது. தான் வைகோவின் தளபதி என்றும், அதற்கு அடையாளமாக அவரின் முகம் பதித்த மோதிரமும், சட்டைப் பாக்கெட்டில் படமும் இருக்கும் என மல்லை சத்யா குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அவர் மட்டுமல்ல மதிமுகவில் உள்ள அனைவருமே வைகோவின் தளபதிகள் தான் என துரை வைகோ விமர்சித்துள்ளார்.