News December 29, 2024
உருகி வரும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை

காலநிலை மாற்றத்தால் உலகம் பாதிக்கப்பட்டு வருகிறது. வெப்பநிலை அதிகரிப்பதால் பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இந்நிலையில், உலகின் மிகப்பெரிய ஏ23ஏ பனிப்பாறை அடுத்த ஒரு மாதத்திற்குள் உடைந்துவிடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். வெட்டெல் கடலில் தெற்கு ஓர்க்னி தீவுக்கு அருகில் உறைந்துள்ள இந்த பனிப்பாறை உடைந்தால், கடல் நீர் மட்டம் உயர்ந்து, ஊருக்குள் கடல் நீர் புகும் ஆபத்தான சூழல்.
Similar News
News July 10, 2025
இபிஎஸ்-க்கு நாவடக்கம் தேவை: முத்தரசன்

சமீபத்தில் தனது சுற்றுப்பயணத்தின் போது பேசிய இபிஎஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக தேய்கின்றன. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா? இல்லையா? என்ற அளவுக்கு முகவரி இல்லாமல் இருப்பதாக விமர்சித்தார். இதற்கு பதிலளித்த சிபிஐ கட்சியின் மாநில செயலாளார் முத்தரசன், இபிஎஸ்-க்கு நாவடக்கம் தேவை என்றும், MGR-க்கு அரசியலில் நிரந்தர முகவரி பெற்று தந்ததே சிபிஐ தான் எனவும் அவர் கூறினார்.
News July 10, 2025
ஜூலை 10… வரலாற்றில் இன்று!

*1806 – வேலூர் சிப்பாய் எழுச்சி – வேலூர் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் பல ஆங்கிலேயப் படையினர் கொல்லப்பட்டனர். *1949 – கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பிறந்தநாள் *1973 – வங்கதேசத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் *2006 – இந்தியாவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்சாட்-4 செயற்கைக்கோளை ஏற்றிச்சென்ற ஜி.எஸ்.எல்.வி. விண்கலம் இயந்திரக் கோளாறினால் கடலில் வீழ்ந்தது.
News July 10, 2025
எலான் மஸ்க் நிறுவனத்துக்கு இந்தியா அனுமதி..!

இந்தியாவில் அதிவேக இணைய சேவை வழங்கும் வகையில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங் நிறுவனத்திற்கு 5 ஆண்டுகள் அனுமதியை IN-SPACE மையம் வழங்கி உள்ளது. இதன் மூலம் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் 4408 முதல் தலைமுறை செயற்கை கோள்கள் இந்திய வான் எல்லை பகுதியில் செயல்பட தொடங்கும் என்றும், இதனால் 600 Gbps வேகத்தில் இணைய சேவை பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.