News April 11, 2025
AI உதவியுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை!

AI வளர்ச்சி பல துறைகளில் மனிதனை ஓரங்கட்ட தொடங்கி விட்டது. AI உதவியுடன், உலகில் முதல் குழந்தை பிறந்துவிட்டது. மெக்சிகோ நாட்டை சேர்ந்த 40 வயது பெண்ணிற்கு IVF முறையில், ஆண் குழந்தை பிறந்துள்ளது. IVF என்பது, Intracytoplasmic sperm ஊசியின் மூலம், நேராக கருமுட்டையில் விந்தணுவை மனித உதவியுடன் செலுத்தப்படுவதாகும். ஆனால், AI வந்துவிட்டதால், இனி மனித உதவி தேவைப்படாது. இன்னும் என்னலாம் மாறப்போகிறதோ!
Similar News
News November 26, 2025
BREAKING: 2 கோடி ஆதார் நீக்கம்

நாடு முழுவதும் உயிரிழந்த 2 கோடி பேரின் ஆதார் எண்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக UIDAI அறிவித்துள்ளது. பொது விநியோக திட்டம், இந்திய பதிவாளர் ஜெனரல் உள்ளிட்ட அரசு நிறுவனங்களின் தரவுகள் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட ஆதார் எண்கள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படாது, அதேசமயம் மோசடிகளை தடுக்க இந்த நீக்கம் உதவிகரமாக இருக்கும் என்றும் UIDAI தெரிவித்துள்ளது.
News November 26, 2025
மரத்திற்காக உயிரைவிட்ட 363 பேர்!

1730-ல் ஜோத்பூர் மன்னர் அபய் சிங் கட்டுமானத்திற்கு கெஜ்ரி மரங்களை சேகரிக்க உத்தரவிடுகிறார். ஆனால், கெஜ்ரி மரங்கள் பிஷ்னோய் சமூகத்தினருக்கு புனிதமானது என்பதால், மரங்களை கட்டிப்பிடித்து கொண்டு, வெட்ட வேண்டாம் என அவர்கள் கெஞ்சினர். விடாப்பிடியாக இருந்த ராணுவ வீரர்கள், 363 பேரை வெட்டி கொன்று விட்டு மரங்களை சேகரித்தனர். தகவல் அறிந்து குற்றவுணர்ச்சி கொண்ட மன்னர், மரங்கள் வெட்டுவதை கைவிட உத்தரவிட்டார்.
News November 26, 2025
கர்நாடகா CM மாற்றமா? முடிவுக்கு வரும் பஞ்சாயத்து!

கர்நாடகா காங்கிரஸ் கோஷ்டி பூசல் குறித்து, வரும் டிச.,1 நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக, தலைமை முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் CM மற்றும் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக டிகே சிவக்குமார் ராகுல் காந்தியை தொடர்பு கொள்ள முயற்சித்த நிலையில், அவர் பொருத்திற்குமாறு கூறியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


