News December 8, 2024
ஆட்சியை கவிழ்த்த சிறுவனின் வார்த்தைகள்

சிரியாவில் நடந்துள்ள ஆட்சி மாற்றத்துக்கு, Mouawiya Syasneh என்ற 14 வயது சிறுவனின் கோபம் தான் காரணம் தெரியுமா? ஆம், அரசின் அடக்குமுறையை கண்டித்து 2011-ல் டாரா நகரச் சுவரில், ‘அடுத்து உன் முறை தான், டாக்டர்’ என அதிபர் ஆசாத்தை குறித்து எழுதினான். அவனும் நண்பர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். அதுவே ஆட்சிக்கு எதிரான தீப்பொறியை கிளப்ப, அடுத்த 14 ஆண்டுகள் உள்நாட்டுப் போர் தான். இன்று ஆட்சிக் கவிழ்ந்தது.
Similar News
News April 7, 2026
தங்கம் விலை மளமளவென குறைகிறது

தங்கம் விலை தொடர் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. ஆனால், USA வேலைவாய்ப்பு தரவுகள் சாதகமாக உள்ளதால், அந்நாட்டின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை மாற்றாது என எதிர்பார்க்கப்படுகிறது. இது டாலர் மதிப்பை வலுவடைய செய்யும் என்பதால், தங்கம் விலை சரிந்து சர்வதேச சந்தையில் 4,500 டாலருக்கு கீழ் வரக்கூடும். இதனால் உள்ளூர் சந்தையிலும் தங்கம் விலை அதிகளவில் குறைய வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
News April 7, 2026
FLASH: ஹரி நாடார் வேட்புமனு நிராகரிப்பு

ஆலங்குளம் தொகுதியில் ஹரி நாடாரின் வேட்புமனுவை தேர்தல் அலுவலர் நிராகரித்துள்ளார். அவர் சிறையில் இருந்தபடி முகவர் மூலம் வேட்புமனு தாக்கல் செய்தது விதிகளின்படி செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பனங்காட்டுப் படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜாவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ல், ஆலங்குளத்தில் ஹரி நாடார் 37,727 வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
News April 7, 2026
லாக்டவுன்.. முதல் நாடாக அறிவித்தது

மேற்காசிய போர் பதற்றத்தால், பாகிஸ்தானில் கடும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், PM ஷெபாஸ் ஷெரிஃப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இன்று முதல் பகுதியளவு பொதுமுடக்கத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன்படி, கடைகள், வணிக வளாகங்கள் இரவு 8 மணிக்கு மூட வேண்டும். ஹோட்டல்கள், திருமண அரங்குகள் இரவு 10 மணிக்கு மேல் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.


