News April 17, 2024

தமிழகம் முழுவதும் ஓய்ந்தது பரப்புரை

image

தமிழ்நாட்டில் தீவிரமாக நடைபெற்று வந்த பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் ஒரு நாளுக்கு முன்னதாக இன்றுடன் பரப்புரை நிறைவடைந்திருக்கிறது. இப்போது முதல் வாக்குப்பதிவு முடியும் வரை எந்தக் கட்சியும் சுயேச்சை வேட்பாளர்களும் பரப்புரை செய்வதற்கு அனுமதி கிடையாது.

Similar News

News April 30, 2025

இன்று தங்கம் வாங்க முடியாதவங்க இத பண்ணுங்க!

image

அட்சய திருதியை நாளில் தங்கம் மட்டுமல்ல, எந்த பொருளை வாங்கினாலும், மங்களம் உண்டாகும் என்பது நம்பிக்கை. அதே போல, நீங்கள் செய்ய விரும்பும் ஒரு காரியத்தையும் இன்று தொடங்கினால், அது வெற்றியில் முடியும் எனப்படுகிறது.
அரை கிலோ அரிசியை வாங்கி சிலருக்கு தானமாக வழங்கலாம். ஒரு வேளை உணவாவது மற்றவர்களுக்கு வாங்கி தரலாம். இதன்மூலம் நல்ல வளர்ச்சியும், மகாலட்சுமி அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

News April 30, 2025

அட்சய திருதியை: தங்கம் விலையில் மாற்றமில்லை!

image

அட்சய திருதியையொட்டி தங்கம் விலை இன்று உயர்வை சந்திக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், தங்கம் விலையில் மாற்றமில்லை என வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,980-க்கும், சவரன் ₹71,840-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியை பொறுத்தவரையில் 1 கிராம் ₹111-க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,11,000-க்கும் விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ₹320 விலை உயர்ந்தது கவனிக்கத்தக்கது.

News April 30, 2025

தேமுதிக பொதுக்குழு இன்று கூடுகிறது

image

பரபரப்பான அரசியல் சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் விஜய பிரபாகரனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தல், கூட்டணி விவகாரம் குறித்தும் அறிவிப்பு வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

error: Content is protected !!