News October 23, 2025

அதிகாரிகளை வறுத்தெடுத்த செல்வப்பெருந்தகை

image

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் ஐந்து கண் மதகில் 3 ஷட்டர்கள் வழியாக 500 கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் அதிகாரிகளுடன் நேற்று அங்கு, ஸ்ரீபெரும்புதுார் MLA செல்வப்பெருந்தகை ஆய்வில் ஈடுபட்டார். அப்போது மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரியாமல் தண்ணீரை திறந்து விட்டது ஏன் என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். நீங்களே மக்கள் பிரதிநிதியாகி விட்டால் எதற்கு அரசு எனவும் கடிந்துகொண்டார்.

Similar News

News October 23, 2025

RECIPE: உடலை வலுவாக்கும் பாசிப்பயறு கஞ்சி!

image

◆முடி, தோல் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் இந்த கஞ்சி உதவும் ➥பாசிப்பயறு, வேர்க்கடலை, கொண்டைக்கடலை, நட்ஸ் வகைகளுடன், சிறுதானியங்களை சேர்த்து சத்து மாவாக அரைத்து கொள்ளுங்கள் ➥தானியங்கள் குறைவாகவும், பயறு வகைகள் அதிகமாகவும் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள் ➥2 ஸ்பூன் அளவு மாவை எடுத்து, நன்கு கரைத்து உப்பு சேர்த்து, கஞ்சியாக்கி குடித்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். SHARE.

News October 23, 2025

பருவமழை எதிரொலி: சுமார் 88% தண்ணீர் சேமிப்பு!

image

தமிழகம் முழுவதும் பெய்து வரும் பரவலான மழையால் அனைத்து நீர்த்தேக்கங்களும் நிறைந்து வருகின்றன. நீர்வள துறை பராமரிப்பில் உள்ள 90 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 224 TMC ஆகும். இதில், தற்போது 196.897 TMC அதாவது 87.77% தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 14, 141 பாசன ஏரிகளில், 1,522 ஏரிகள் 100%, 1,842 ஏரிகள் 76% முதல் 99% வரை நிரம்பியுள்ளன.

News October 23, 2025

அக்.28-ல் தமிழகம் வரும் துணை ஜனாதிபதி

image

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக, வரும் 28-ம் தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். கோவையில் பாஜக சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் அவர் கலந்து கொள்கிறார். அதைத்தொடர்ந்து வரும் 29-ம் தேதி தான் பிறந்த ஊரான திருப்பூருக்கு செல்லும் நிலையில், அவரது தாயாரை சந்தித்து ஆசி பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின் CPR, தனது சொந்த ஊருக்கு முதல் முறையாக செல்கிறார்.

error: Content is protected !!