News April 25, 2024
உடல் எடை குறைப்பு சிகிச்சைக்குச் சென்றவர் பலி

சென்னையில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளைஞர், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த ஹேமசந்திரன் (26), 150 கிலோவுக்கு மேல் உடல் எடை இருத்ததால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
Similar News
News September 23, 2025
தங்கமாக ஜொலிக்கும் ராஷி கண்ணா

நடிகை ராஷி கண்ணா தனது சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். பதிவிட்ட 3 மணி நேரத்தில் லைக்குகள் லட்சக் கணக்கில் குவிந்துள்ளது. இந்த போட்டோஸை மேலே இணைத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. பிடித்திருந்தா லைக் போடுங்க.
News September 23, 2025
பிராமணர் என்பதால் இட ஒதுக்கீடு இல்லை: நிதின் கட்கரி

கடவுள் எனக்கு செய்த மிகப்பெரிய உதவி என்னவென்றால், நான் ஒரு பிராமணன், இதனால் எனக்கு இடஒதுக்கீடு கிடைக்கவில்லை என்று காமெடியாக பலரிடம் கூறுவேன் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாக்பூரில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், எந்த மனிதரும் சாதி, மதம், மொழியால் உயர்ந்தவர் அல்ல, மாறாக அவர்களின் குணத்தாலேயே உயர்ந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். பிராமணர் குறித்த நிதினின் கருத்து பேசுபொருளாகியுள்ளது.
News September 23, 2025
தூங்கும் போது அதிக நேரம் சிறுநீரை அடக்குகிறீர்களா?

இரவில் பலரும் துக்கத்தை கெடுத்து கொள்ளக்கூடாது என்பதற்காக, அப்படியே சிறுநீரை அடக்குவார்கள். ஆனால், அது நோய்களுக்கு காரணமாகலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சிறுநீர்ப்பை, நரம்புகளில் இது பாதிப்பை ஏற்படுத்தும். சிறுநீர் கழிக்கும் தூண்டுதலை உதாசினப்படுத்தினால், இடுப்பு தசைகள் வலுவிழக்கும். இதனால், கிட்னியில் கல் உண்டாகலாம். சிறுநீர்ப்பாதை தொற்றும் ஏற்படும். அடுத்த வாட்டி யோசியுங்க!