News September 5, 2025
அஸ்திவாரத்தை ஆட்டி வைத்த தீர்ப்பு: அமைச்சர் கவலை

TET தேர்வு கட்டாயம் <<17579658>>என்ற தீர்ப்பு,<<>> அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்துவதா, அல்லது தாங்கள் தேர்வுக்கு தயாராவதா என்ற அச்சம் அவர்களிடம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், ஆலோசித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
Similar News
News September 5, 2025
சட்டம் அறிவோம்: இந்த சட்டம் ஆண்களுக்கு தெரியணும்!

சில மனைவிகள், பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் கணவனை மிரட்டி குடும்பத்தின் அமைதியையும், நிம்மதியையும் சிதைக்கும் நிலை உருவாகலாம். இத்தகைய சூழலில், BNS பிரிவு 351 உதவும். ஒருவரை அச்சுறுத்தி அவரை சேதப்படுத்தும் நோக்கத்துடன், மிரட்டும் செயலைக் குற்றமாகக் கருதும் தண்டனை சட்டம் இது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது 2 ஆண்டுகளும், அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரையும் சிறை & அபராதம் விதிக்கப்படும். SHARE IT.
News September 5, 2025
BCCI பொறுப்புக்கு காய் நகர்த்தும் பிரவீன் குமார்

அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவில் இடம்பெற, முன்னாள் இந்திய வீரர் பிரவீன் குமார் விண்ணப்பித்துள்ளார். BCCI-ன் தேசிய அணிக்கான தேர்வுக்குழுவில், 2 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வரும் 10-ம் தேதி கடைசி நாள் என்பதால், பிரவீன் குமார் தற்போது விண்ணப்பித்துள்ளார். அதேபோல், மற்றொரு முன்னாள் வீரரான RP சிங்கும் விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News September 5, 2025
செங்கோட்டையன் மனம் திறக்கவில்லை: திருமா

செங்கோட்டையன் சொன்னது போல் முழுமையாக, மனம் திறந்து பேசவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி பேச விரும்பவில்லை, ஆனாலும் அவர் இன்னும் வெளிப்படையாகவே பேசியிருக்கலாம் எனவும் கூறியுள்ளார். பெரியார் இயக்கம் என்ற முறையில் விசிக, அதிமுகவை பெரிதும் மதிக்கிறது என்றார்.