News April 14, 2024
தமிழக மக்கள் அளிக்கும் தீர்ப்பு மாற்றத்தை உருவாக்கும்

மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் அளிக்கும் தீர்ப்பு நிச்சயமாக நாட்டில் அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் என்று சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மதுரையில் பேசிய அவர், “வரலாற்றில் இதுவரைக்கும் இல்லாத மிகப்பெரும் அச்சுறுத்தலில் இந்தியா உள்ளது. ஜனநாயகம், சமூக நீதி ஆகியவற்றை பாதுகாக்க தேசத்திற்கு வழி்காட்டக்கூடிய வகையில் தமிழக மக்களின் தீர்ப்பு இருக்கும்” என்றார்.
Similar News
News December 20, 2025
மகளிர் உரிமைத்தொகை: QR Code மூலம் தீர்வு காண முடிவு

மகளிர் உரிமைத்தொகை தொடர்பான குறைகளை தீர்க்க QR Code வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 1.40 கோடி பேருக்கு ₹1,000 வழங்கப்பட்டு வருகிறது. 2-ம் கட்ட திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட சுமார் 12 லட்சம் பேரில் தகுதியானோர் மேல்முறையீடு செய்ய அரசு <
News December 20, 2025
அன்புமணியின் மகள் தேர்தலில் போட்டியா?

2024 மக்களவைத் தேர்தலில் தாய் சௌமியா அன்புமணி வெற்றி பெற தருமபுரி தொகுதியில் தீவிரமாக பரப்புரை செய்து கவனத்தை ஈர்த்தவர் சங்கமித்ரா. தற்போது சினிமாவில் தயாரிப்பாளராக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், 2026 தேர்தலில் அவர் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட பாமக நிர்வாகிகள் விருப்ப மனு அளித்துள்ளனர். ஆனால், இது அவரது விருப்பத்தின் பேரில் வழங்கப்பட்டதா, நிர்வாகிகளின் ஆர்வமா என்பது தெரியவில்லை.
News December 20, 2025
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், மாற்றுக்கட்சியினரை இழுக்கும் வேலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. அந்த வகையில், அதிமுக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்ற அமைச்சர்கள், தேர்தல் பணியை தீவிரப்படுத்த அறிவுறுத்தினர்.


