News April 14, 2024
தமிழக மக்கள் அளிக்கும் தீர்ப்பு மாற்றத்தை உருவாக்கும்

மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் அளிக்கும் தீர்ப்பு நிச்சயமாக நாட்டில் அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் என்று சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மதுரையில் பேசிய அவர், “வரலாற்றில் இதுவரைக்கும் இல்லாத மிகப்பெரும் அச்சுறுத்தலில் இந்தியா உள்ளது. ஜனநாயகம், சமூக நீதி ஆகியவற்றை பாதுகாக்க தேசத்திற்கு வழி்காட்டக்கூடிய வகையில் தமிழக மக்களின் தீர்ப்பு இருக்கும்” என்றார்.
Similar News
News November 23, 2025
திருப்பூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News November 23, 2025
தாய்ப்பாலில் யுரேனியம் கலந்திருப்பது கண்டுபிடிப்பு

பிஹாரில் 6 மாவட்டங்களில் உள்ள 40 தாய்மார்களின் தாய்ப்பால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்நிலையில், அதில் யுரேனியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்ததன் காரணமாக தாய்ப்பாலில் யுரேனியம் கலந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த தாய்ப்பாலை குழந்தைகள் பருகினால் அவர்களுக்கு புற்றுநோய், நரம்பியல் கோளாறுகள் ஏற்படும் என AIIMS டாக்டர் அசோக் சர்மா எச்சரித்துள்ளார்.
News November 23, 2025
விஜய்க்கு அண்ணாவை பற்றி என்ன தெரியும்? TKS

அண்ணாவின் கொள்கைகளை திமுக மறந்துவிட்டதாக விஜய் விமர்சித்திருந்த நிலையில், விஜய்க்கு அண்ணாவை பற்றி ஒன்றும் தெரியாது என TKS இளங்கோவன் பதிலளித்துள்ளார். அண்ணா CM ஆக வேண்டும் என கட்சி ஆரம்பிக்கவில்லை, ஆனால் முதல் தேர்தலிலேயே CM ஆக வேண்டும் என கட்சி ஆரம்பித்தவர் விஜய் என்று விமர்சித்துள்ளார். அண்ணாவின் கொள்கைகளை இப்போது வரை திமுக நிறைவேற்றி வருவதாகவும் TKS குறிப்பிட்டார்.


