News May 7, 2025
கிடுகிடுவென உயரும் ரூபாயின் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்று வேகமாக உயர்ந்தது. ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, இன்று ஒரே நாளில் 38 பைசா உயர்ந்து 84.58 ரூபாய் என வர்த்தகம் ஆகிறது. இந்தியா உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை சுமூகமாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்ததையடுத்து, ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருகிறது. இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்த வரிகளை டிரம்ப் நீக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News January 4, 2026
இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: எலான் மஸ்க்

Grok AI-ஐ பயன்படுத்தி ஆபாசமான கன்டென்ட்களை உருவாக்கி பதிவிடுபவர்கள், அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என X ஓனர் எலான் மஸ்க் எச்சரித்துள்ளார். இருப்பினும், AI என்பது ஒரு பேனாவை போன்றது, எந்த ஒரு தவறுக்கும், எழுதியவர்கள் தான் பொறுப்பாக முடியுமே தவிர பேனா பொறுப்பாகாது என்றும் கூறியுள்ளார். முன்னதாக, <<18745124>>Grok AI-ஐ<<>> பயன்படுத்தி ஆபாச கன்டென்ட்கள் பதிவிடுவது தொடர்பாக இந்திய அரசு விளக்கம் கேட்டிருந்தது.
News January 4, 2026
இப்படியும் ஒரு சாவா? ஜாக்கிரதை!

சாவு எப்படி வரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது! உ.பி.,யின் பகோரா கிராமத்தில், பசவான் என்பவர் கடும் குளிருக்கு நெருப்பு மூட்டி குளிர் காய்ந்திருக்கிறார். அப்போது திடீரென வலிப்பு ஏற்படவே, குளிர்காய்ந்த நெருப்பிலேயே விழுந்து பலியாகியுள்ளார். இதில் கொடுமை, அவர் உடல் கருகும் வாசனையை உணர்ந்த பின்னரே, அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்துள்ளனர். மக்களே இந்த குளிர்காலத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க!
News January 4, 2026
BREAKING: பள்ளிகள் திறப்பு.. தமிழக அரசு புதிய உத்தரவு

விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் கூடாது என HM-களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. பள்ளி வளாகத்தில் உள்ள மின் இணைப்புகளில் மின்கசிவு உள்ளதா, பள்ளி கட்டடங்கள் மழையால் பலவீனமாகி உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து தரமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


