News May 7, 2025
கிடுகிடுவென உயரும் ரூபாயின் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்று வேகமாக உயர்ந்தது. ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, இன்று ஒரே நாளில் 38 பைசா உயர்ந்து 84.58 ரூபாய் என வர்த்தகம் ஆகிறது. இந்தியா உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை சுமூகமாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்ததையடுத்து, ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருகிறது. இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்த வரிகளை டிரம்ப் நீக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News December 1, 2025
லெஜெண்ட் டென்னிஸ் வீரர் காலமானார்

பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 2 முறை வென்ற இத்தாலியை சேர்ந்த டென்னிஸ் வீரர் நிக்கோலா பீட்ரங்கேலி(92) காலமானார். அவரது மறைவுச் செய்தியை இத்தாலி டென்னிஸ் ஃபெடரேசன் வெளியிட்டுள்ளது. World Tennis Hall of Fame-ல் இடம்பெற்ற ஒரே இத்தாலி வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இவர்தான். மொத்தம் 44 ஒற்றையர் பட்டத்தை வென்ற இந்த லெஜெண்டுக்கு டென்னிஸ் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
News December 1, 2025
அரசால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்: தமிழிசை

டெல்டாவில் முறையாக நெல் கொள்முதல் செய்வதில் தமிழக அரசு கோட்டை விட்டுள்ளதாக தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார். விளைச்சல் குறித்து முறையான கணக்கெடுப்பு நடத்தி, கொள்முதலுக்கான ஏற்பாட்டை அரசு செய்யாததால் விவசாயிகள் கண்ணீர் வடிப்பதாகவும் அவர் சாடியுள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயிகளையும், முளைத்து வீணான நெற்பயிர்களையும் காண CM டெல்டா சென்றாரா எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
News December 1, 2025
பெங்களூருவில் IPL போட்டிகள் நடைபெறுமா?

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 2026 IPL போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதிகளவிலான கூட்டத்தை தாங்கும் அளவிற்கு பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வறிக்கையை சமர்பிக்க கர்நாடக கிரிக்கெட் சங்கத்திற்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த IPL சீசன் வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


