News May 7, 2025
கிடுகிடுவென உயரும் ரூபாயின் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்று வேகமாக உயர்ந்தது. ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, இன்று ஒரே நாளில் 38 பைசா உயர்ந்து 84.58 ரூபாய் என வர்த்தகம் ஆகிறது. இந்தியா உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை சுமூகமாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்ததையடுத்து, ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருகிறது. இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்த வரிகளை டிரம்ப் நீக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News August 13, 2025
மும்பை அணியின் கேப்டனாகும் CSK வீரர்

கடந்த IPL சீசனில் CSK-வின் இளஞ்சிங்கமாக களம் கண்ட ஆயுஷ் மாத்ரே, இந்தியா U19 அணியின் கேப்டனாக வழிநடத்தினார். இந்நிலையில், புச்சி பாபு கோப்பை (Buchi Babu Trophy) தொடரில், மும்பை அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த போட்டிகள் ஆக.18 – செப்.9 வரை சென்னையில் நடைபெறவுள்ளன. சமீபத்தில் நடந்த கிளப் போட்டியில் 48 பந்துகளில் 82 ரன்களை விளாசியிருந்தார் ஆயுஷ்.
News August 13, 2025
ராஜினாமா செய்கிறார் மதுரை மேயர்

மதுரை மேயர் இந்திராணி (திமுக) ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ₹150 கோடி முறைகேடு விவகாரத்தில் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டார். தேர்தல் வரவுள்ள நிலையில், இவ்விவகாரம் அரசியல் ரீதியாக விவாதத்தை கிளப்பியது. ஸ்டாலின் உத்தரவின்பேரில் 5 மண்டல தலைவர்கள், 2 நிலைக்குழுத் தலைவர்கள் ராஜினாமா செய்த நிலையில், தற்போது இந்திராணியும் ராஜினாமா செய்யவுள்ளார்.
News August 13, 2025
பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

✪அதிமுக Ex MP <<17389715>>மைத்ரேயன் <<>>திமுகவில் இணைந்தார்
✪ஆக.16 ‘நலம் <<17388198>>காக்கும்<<>> ஸ்டாலின்’ முகாம் ரத்து
✪வரி <<17388293>>சர்ச்சைக்கு<<>> மத்தியில் டிரம்ப்- PM மோடி சந்திப்பு
✪சரிவில் தங்கம் விலை.. சவரனுக்கு ₹40 குறைந்தது
✪ <<17389134>>விபூதி<<>> வைக்கும் ரகசியம் சொன்ன பிரக்ஞானந்தா