News May 7, 2025
கிடுகிடுவென உயரும் ரூபாயின் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்று வேகமாக உயர்ந்தது. ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, இன்று ஒரே நாளில் 38 பைசா உயர்ந்து 84.58 ரூபாய் என வர்த்தகம் ஆகிறது. இந்தியா உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை சுமூகமாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்ததையடுத்து, ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருகிறது. இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்த வரிகளை டிரம்ப் நீக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News November 17, 2025
பொங்கல் விடுமுறை… வந்தது HAPPY NEWS

பொங்கல் விடுமுறையில் ஊருக்கு போக ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை என சோகத்தில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. 150-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. டிச.15 முதல் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், பொங்கலுக்கு ஊருக்குச் செல்பவர்கள் பணியிடங்களுக்கு திரும்புவதற்கும் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
News November 17, 2025
பொங்கல் விடுமுறை… வந்தது HAPPY NEWS

பொங்கல் விடுமுறையில் ஊருக்கு போக ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை என சோகத்தில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. 150-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. டிச.15 முதல் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், பொங்கலுக்கு ஊருக்குச் செல்பவர்கள் பணியிடங்களுக்கு திரும்புவதற்கும் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
News November 17, 2025
85,000 புள்ளிகளை நெருங்கிய சென்செக்ஸ்

வாரத்தின் முதல் நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. 388 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ், 84,950.95 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல 103.40 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 26,013.45 புள்ளிகளில் நிறைவு செய்தது. குறிப்பாக ஆட்டோ, எனர்ஜி, மீடியா துறைகள் ஏற்றம் கண்டன. முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


