News May 7, 2025
கிடுகிடுவென உயரும் ரூபாயின் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்று வேகமாக உயர்ந்தது. ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, இன்று ஒரே நாளில் 38 பைசா உயர்ந்து 84.58 ரூபாய் என வர்த்தகம் ஆகிறது. இந்தியா உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை சுமூகமாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்ததையடுத்து, ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருகிறது. இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்த வரிகளை டிரம்ப் நீக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News January 4, 2026
இணைய சேவைகளை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இலை வலைய அமைப்பு நிறுவனம் பாரத் நெட் திட்டத்திற்கு கிராமப்புறங்களில் இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. எனவே இணைய சேவைகளை வழங்க தகுதியான தொழில் பங்கீட்டாளர்கள் ஜன.14 க்குள் https://tanfinet.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News January 4, 2026
உலகில் அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடுகள்

வெனிசுலா மீது டிரம்ப் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதால், உலகின் எண்ணெய் வளம் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. உலக ஆற்றல் தேவையில் 70% கச்சா எண்ணெய் மூலமே பெறப்படுகிறது. எனவே, அதிகம் இறக்குமதி செய்யப்படும் வளமாகவும், வளமான பொருளாதாரத்தின் குறியீடாகவும் இது உள்ளது. அந்த வகையில், அதிக எண்ணெய் வளங்களை கொண்ட நாடுகளை மேலே தொகுத்துள்ளோம். அதை Swipe செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
News January 4, 2026
திமுக ஆட்சியை அகற்ற விரதம் இருங்கள்: நயினார்

திமுக ஆட்சியை அகற்ற அடுத்த 3 மாதத்திற்கு பாஜகவினர் விரதம் இருக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், TN-ல் எங்கும் போதை மயம். எங்குமே பெண்களுக்கு பாதுகாப்பில்லை என விமர்சித்தார். அதோடு கரூரில் 41 பேர் உயிரிழந்ததற்கு செந்தில் பாலாஜியே காரணம் என்றும், திருப்பரங்குன்றத்தில் பூரண சந்திரன் தீக்குளித்ததற்கு காரணம் CM ஸ்டாலின் என்றும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.


