News May 7, 2025
கிடுகிடுவென உயரும் ரூபாயின் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்று வேகமாக உயர்ந்தது. ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, இன்று ஒரே நாளில் 38 பைசா உயர்ந்து 84.58 ரூபாய் என வர்த்தகம் ஆகிறது. இந்தியா உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை சுமூகமாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்ததையடுத்து, ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருகிறது. இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்த வரிகளை டிரம்ப் நீக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News December 16, 2025
வரலாற்றில் இன்று

*1770–இசைமேதை பீத்தோவன் பிறந்தநாள்.
*1928 – சென்னை மாகாண முதல் CM பனகல் அரசர் நினைவு நாள்.
*1971 – போரில் இந்தியா ராணுவத்திடம் பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்தனர்.
*1971 – பிரிட்டனிடம் இருந்து பஹ்ரைன் அரசு விடுதலை பெற்றது.
*1991 – சோவியத் யூனியனில் இருந்து கஜகஸ்தான் விடுதலை பெற்றது.
News December 16, 2025
IPL மினி ஏலத்தின் பட்டியலில் கடைசி நேரத்தில் டுவிஸ்ட்

IPL-ன் மினி ஏலம் அபுதாபியில் இன்று மதியம் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது. கடைசி நேரத்தில் அபிமன்யூ ஈஸ்வரன் உள்பட 19 வீரர்களின் பெயர்கள் ஏலப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து ஏலத்தில் உள்ள வீரர்களின் எண்ணிக்கை 369-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 77 பேரை மட்டும் IPL அணிகளால் எடுக்க முடியும். CSK(43) மற்றும் KKR (64) அதிக தொகையுடன் ஏலத்திற்குள் நுழைகின்றன.
News December 16, 2025
கேரளத்தின் வெற்றி TN-ல் எதிரொலிக்கும்: நயினார்

கேரளாவின் திருவனந்தபுரம் மாநகராட்சியை <<18551942>>பாஜக <<>>கைப்பற்றி இடதுசாரிகளுக்கு அதிர்ச்சியளித்தது. இந்நிலையில் கேரளத்தில் பெற்ற வெற்றி விரைவில் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான மனநிலை மக்களிடம் காணப்படுவதாகவும், அதை பாஜக சரியாக பயன்படுத்த வேண்டும் எனவும் தொண்டர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


