News April 2, 2025

மீண்டும் ரயில் தடம் புரண்டது

image

ஆந்திராவில் பயணிகள் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விசாகப்பட்டினத்தில் இருந்து சம்பல்பூர் சென்ற நாகவள்ளி எக்ஸ்பிரஸ் ரயில், விஜயநகரம் அருகே தடம்புரண்டது. அந்த நேரத்தில் ரயில் மெதுவாக சென்றதால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு தினங்களுக்கு முன் ஒடிஷாவில் ரயில் தடம்புரண்டதில் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 13, 2026

பெண் மீது சிறுநீர் கழித்தவர் மரணம்.. அதிர்ச்சி

image

சென்னையில் கலைச்செல்வன் தனது நண்பருடன் ஆட்டோவில் பயணித்துள்ளனர். குடிபோதையிலிருந்த கலைச்செல்வன், ஆட்டோவில் இருந்தவாறே வெளியில் சிறுநீர் கழித்துள்ளார். இது அங்கு நடந்து சென்ற பெண் மீது பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுற்றி இருந்தவர்கள் தாக்கியதில், கலைச்செல்வன் உயிரிழந்தார். எனவே, அவரின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News March 13, 2026

தவெக கூட்டணி முடிவில் திடீர் மாற்றமா?

image

NDA-வில் தவெக இணைய வாய்ப்பிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், உரிய அங்கீகாரம் கிடைத்தால் NDA கூட்டணியில் சேர பெரும்பாலான <<19372536>>மா.செ.,க்கள் பச்சைக் கொடி<<>> காட்டியுள்ளனராம். இதனையடுத்து, விஜய்யின் நெருங்கிய நண்பர் ஒருவர் பாஜக தலைமையிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. NDA-வில் தவெகவுக்கு 45 சீட் கொடுக்க முன்வந்திருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

News March 13, 2026

இனி RTI-ல் பொதுத்தேர்வு விடைத்தாளை பெறலாம்!

image

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களுடைய விடைத்தாள் நகல்களை RTI-ன் கீழ் விண்ணப்பித்து பெறலாம் என மாநில தகவல் ஆணையம் (SIC) தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த SIC, RTI கட்டண விதிகளின்படி பக்கத்திற்கு ₹2 செலுத்தி விடைத்தாள் நகல்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. விடைத்தாள் பராமரிக்கப்படும் அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் பெற்றுக்கொள்ளலாமாம்.

error: Content is protected !!