News April 2, 2025

மீண்டும் ரயில் தடம் புரண்டது

image

ஆந்திராவில் பயணிகள் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விசாகப்பட்டினத்தில் இருந்து சம்பல்பூர் சென்ற நாகவள்ளி எக்ஸ்பிரஸ் ரயில், விஜயநகரம் அருகே தடம்புரண்டது. அந்த நேரத்தில் ரயில் மெதுவாக சென்றதால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு தினங்களுக்கு முன் ஒடிஷாவில் ரயில் தடம்புரண்டதில் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 23, 2025

வாக்கு திருட்டு நடக்கும் வரை உழலும் நீடிக்கும்: ராகுல்

image

வாக்குகளை திருடி, அமைப்புகளை கைப்பற்றி பாஜக ஆட்சியில் அமர்ந்ததால் தான், நாட்டில் வேலையின்மை தலை விரித்து ஆடுவதாக ராகுல் காந்தி சாடியுள்ளார். வருங்காலத்திற்காக இளைஞர்கள் கடினமாக உழைத்து வரும் நிலையில், PM மோடியோ தனது பணக்கார நண்பர்கள் ஆதாயம் அடைய பாடுபடுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், வாக்கு திருட்டு நடைபெறும் வரை, இந்தியாவில் ஊழலும், வேலையின்மையும் நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

News September 23, 2025

10, 12-ம் வகுப்பு தேர்வு தேதியில் மாற்றமா?

image

தமிழக சட்டப் பேரவை தேர்தல் 2026 மே 2-வது வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை முன்னரே முடிப்பது மட்டுமல்லாமல், முடிவுகளையும் மே முதல் வாரத்திலேயே வெளியிட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கல்வியாண்டின் கடைசி வேலை நாள் ஏப்.24 என்பதால், ஏப்.10-ம் தேதிக்குள் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை முடிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாம்.

News September 23, 2025

12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை

image

தமிழகத்தில் அடுத்த சில மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே, மழையில் நனைவதை தவிர்க்க, வெளியே செல்லும்போது மறக்காமல் குடை எடுத்துச் செல்லுங்கள்.

error: Content is protected !!