News March 23, 2025
2013 முதல் தொடரும் சோகம்… MI-ன் வரலாறு மாறுமா?

IPL-ல் அதிக ஃபேன்ஸ் கொண்டது சென்னை, மும்பை அணிகள்தான். இந்த இரு அணிகளும் இன்று இரவு பலப்பரீட்சை நடத்த உள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஆனால், மும்பை அணிக்கு ஒரு சோக வரலாறு தொடர்கிறது. 2013ம் ஆண்டில் இருந்து, முதல் போட்டியில் அந்த அணி வென்றதே இல்லை. அதனால், சேப்பாக்கத்தில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற மும்பை அணி முனைப்பு காட்டும். இன்று வெல்லப் போவது யார்? உங்கள் கணிப்பு என்ன?
Similar News
News March 25, 2025
நடிகை எமி ஜாக்சனுக்கு 2வது குழந்தை பிறந்தது!!

பிரபல நடிகை எமி ஜாக்சனுக்கு 2வது குழந்தை பிறந்துள்ளது. ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் (37) என்பவரை கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார் எமி ஜாக்சன். தங்களுக்கு பிறந்துள்ள ஆண் குழந்தையுடன் இருக்கும் அழகிய போட்டோவை எமி தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். குழந்தைக்கு ஆஸ்கார் அலெக்சாண்டர் வெஸ்ட்விக் என பெயர் சூட்டியுள்ளனர். இருவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
News March 25, 2025
ஜார்கண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு!

ஜார்கண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின்போது இது பற்றி பேசிய, போக்குவரத்து அமைச்சர் தீபக், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கடந்த ஆண்டே முடிவு செய்யப்பட்டு, அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறினார். தெலங்கானா, பீஹாரை போல், அடுத்த நிதியாண்டின் தொடக்கத்தில் சர்வே நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 25, 2025
மதியம் வெளியே வராதீங்க

தமிழகத்தில் வெயில் வரும் நாள்களில் இன்னும் தீவிரமடையலாம். எனவே பொதுமக்கள் பிற்பகல் நேரத்தில் வெளியே வர வேண்டாம். வெயிலில் மயக்கம் அடைந்து, சுய நினைவை இழந்து இருப்பவர்களை, குப்புற அல்லது மல்லாக்காக படுக்க வைக்க வேண்டும். மருத்துவ ரீதியில் பார்க்கும்போது, இதுபோன்ற நிலையில் இருப்பவர்களை இடது பக்க வாட்டில் படுக்க வைக்கும் முறை தான் சிறந்தது என்று சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது.