News June 25, 2024
வினோத குறிப்பு எழுதிவிட்டு சென்ற திருடன்

சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகத்தில் புகுந்த திருடன், வாட்ச், லேப்டாப் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளார். வினோதம் என்னவென்றால், திருடிய பொருட்கள் வேண்டுமானால், தன்னை தொடர்பு கொள்ளுமாறு கடிதம் எழுதிவிட்டு சென்றுள்ளார். மேலும், பாதுகாப்பு உபகரணங்களை மேம்படுத்துமாறு அறிவுரை வழங்கியுள்ள திருடன், அலுவலகத்தின் நலன் கருதி சில பொருட்களை மட்டும் எடுத்துச் செல்வதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 26, 2025
திருவள்ளூர்: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

திருவள்ளூர் மக்களே.. உங்க ஆண்டு வருமானம் ரூ.10,00,000 கீழ் இருந்தும் கேஸ் மானியம் கிடைக்கவில்லையா? எப்படி விண்ணப்பிக்கணும்னு தெரியலையா? முதலில் உங்க ஆதார் எண்ணை, பேங்க் மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். அதன் பிறகு, இங்கு <
News November 26, 2025
செங்கோட்டையனை திமுகவுக்கு அழைத்த அன்வர் ராஜா!

TN அரசியலில் மூத்த தலைவரான செங்கோட்டையன், திமுகவுக்கு வர வேண்டும் என அன்வர் ராஜா விருப்பம் தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் நாளை தவெகவில் இணைய உள்ளதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், திடீர் திருப்பமாக, <<18392822>>அமைச்சர் சேகர்பாபுவும்<<>> செங்கோட்டையனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனிடையே, நேற்று(நவ.25) மெளனம் சாதித்த செங்கோட்டையன், இன்று ஒருநாள் பொறுத்திருங்கள் எனக் கூறியுள்ளார்.
News November 26, 2025
யார் இந்த பொல்லான்?

ஈரோட்டில் மாவீரன் பொல்லான் சிலையை CM ஸ்டாலின் திறந்து வைத்தார். காவிரி கரையோர போர்(1801), சென்னிமலை போர்(1802), அரச்சலுார் போர்(1803) ஆகியவற்றில் தீரன் சின்னமலையின் வெற்றிக்கு பொல்லான்தான் முக்கிய காரணம். ஒற்றனாக ஆங்கிலப்படைக்குள் ஊடுருவிய பொல்லான் தந்திரங்களை அறிந்து, சின்னமலையை வெற்றிபெற வைத்தார். சிறந்த வாள்வீச்சு வீரராக திகழ்ந்த பொல்லான், 1805-ல் ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


