News June 25, 2024
வினோத குறிப்பு எழுதிவிட்டு சென்ற திருடன்

சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகத்தில் புகுந்த திருடன், வாட்ச், லேப்டாப் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளார். வினோதம் என்னவென்றால், திருடிய பொருட்கள் வேண்டுமானால், தன்னை தொடர்பு கொள்ளுமாறு கடிதம் எழுதிவிட்டு சென்றுள்ளார். மேலும், பாதுகாப்பு உபகரணங்களை மேம்படுத்துமாறு அறிவுரை வழங்கியுள்ள திருடன், அலுவலகத்தின் நலன் கருதி சில பொருட்களை மட்டும் எடுத்துச் செல்வதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 17, 2025
85,000 புள்ளிகளை நெருங்கிய சென்செக்ஸ்

வாரத்தின் முதல் நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. 388 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ், 84,950.95 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல 103.40 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 26,013.45 புள்ளிகளில் நிறைவு செய்தது. குறிப்பாக ஆட்டோ, எனர்ஜி, மீடியா துறைகள் ஏற்றம் கண்டன. முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
News November 17, 2025
85,000 புள்ளிகளை நெருங்கிய சென்செக்ஸ்

வாரத்தின் முதல் நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. 388 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ், 84,950.95 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல 103.40 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 26,013.45 புள்ளிகளில் நிறைவு செய்தது. குறிப்பாக ஆட்டோ, எனர்ஜி, மீடியா துறைகள் ஏற்றம் கண்டன. முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
News November 17, 2025
கொலைகார நோக்கம் கொண்ட தீர்ப்பு: ஷேக் ஹசீனா

வங்கதேச Ex PM ஷேக் ஹசீனா, தனக்கு மரண தண்டனை விதித்த தீர்ப்பு குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு அரசு நிறுவிய மோசடி தீர்ப்பாயம் தனக்கு எதிராக தீர்ப்பளித்து, இது அரசியல் ரீதியான ஒருதலைபட்சமான தீர்ப்பு என அவர் கூறியுள்ளார். மேலும், மக்களால் கடைசியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மீதான கொலைகார நோக்கத்தை இது காட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.


