News March 20, 2025
டென்ஷனான CM.. எச்சரித்த சபாநாயகர்….

சட்டப்பேரவையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக பேச அனுமதிக்காததால் தவாக தலைவர் வேல்முருகன் அமைச்சர்களை நோக்கி கை நீட்டி பேசினார். டென்ஷன் ஆன CM ஸ்டாலின், பேரவையில் அதிக பிரசங்கித்தனமாக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து மரபை மீறி நடந்து கொண்டதாக வேல்முருகனை எச்சரித்த சபாநாயகர், இனி இப்படி நடந்து கொள்ளக்கூடாது என அறிவுறுத்தினார்.
Similar News
News March 21, 2025
கிழங்குகளும்… பயன்களும்…

*மரவள்ளிக் கிழங்கு – இதயத் துடிப்பை சீராக வைக்கும்.
*சேப்பக்கிழங்கு – உடல் வெப்பத்தை தணிக்க உதவும்.
கருணை கிழங்கு – இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.
*சர்க்கரைவள்ளிக் கிழங்கு – சரும பாதுகாப்புக்கு பயனுள்ளது.
*உருளைக் கிழங்கு – நார்சத்தை அதிகரிக்கும்.
*பனங்கிழங்கு – செரிமானப் பிரச்னைகளை சரிசெய்ய உதவும்.
News March 21, 2025
மார்ச் 21: வரலாற்றில் இன்று!

*1984 – மணலாறு பிரதேசத்தைத் தடைவலயமாக்கிய இலங்கை அரசு, அங்கு வாழ்ந்து வந்த தமிழர்களை அடித்து விரட்டினர்.
*2006 – X (ட்விட்டர்) சமூக வலைதளம் உருவாக்கப்பட்டது.
சிறப்பு நாள்:
உலக பொம்மலாட்ட தினம்.
உலக கவிதைகள் தினம்.
உலக காடுகள் தினம்.
சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு தினம்.
News March 21, 2025
நெதர்லாந்துக்கு இந்தியா கோரிக்கை

பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என நெதர்லாந்துக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. PAKக்கு அதிகளவில் கடற்படை சார் தளவாடங்களை நெதர்லாந்து வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி கன்னிவெடி தகர்ப்பு கப்பல்கள், கடலோர ரோந்து கப்பல்களையும் அந்நாடு வழங்குகிறது. மேலும் சீனா, துருக்கிக்கு அடுத்தபடியாக PAKக்கு அதிக ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யும் நாடாக நெதர்லாந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.