News July 26, 2024
இந்த ஆண்டில் 650 வந்தே பாரத் ரயில் தயாரிக்க இலக்கு

சென்னை பெரம்பூர் ICF ஆலையில் வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்படுகிறது. இதுவரை 70 ரயில்களை தயாரித்துள்ள ICF, இந்த நிதியாண்டில் 650 ரயில்களை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது 5 வந்தே ரயில்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், தற்போது 16 பெட்டிகள் கொண்ட ரயிலுக்கு இறுதிக்கட்ட பணி நடப்பதாகவும், எதிர்காலத்தில் 24 பெட்டிகளுடன் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News March 12, 2026
போருக்கு நடுவிலும் சீனாவுக்கு சப்ளையை நிறுத்தாத ஈரான்

ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் ஈரான், அதன் ஏற்றுமதியை மட்டும் நிறுத்தவில்லை. போர் தொடங்கியதிலிருந்து அதன் முக்கிய இறக்குமதியாளரான சீனாவிற்கு சுமார் 12 மில்லியன் பேரல்கள் எண்ணெயை அனுப்பியுள்ளது. அமெரிக்கா & இஸ்ரேல் மீது அழுத்தத்தை அதிகரிக்க ஹார்முஸை ஆயுதமாகப் பயன்படுத்தும் ஈரான், இந்தியா உள்பட பல நாடுகளின் எண்ணெய் கப்பல்களை தடுத்து நிறுத்தியுள்ளது.
News March 12, 2026
தமிழக தேர்தல் தேதி.. முக்கிய தகவல் வெளியானது

TN உள்ளிட்ட 5 மாநிலங்களின் பேரவைத் தேர்தல் தேதிகளை நிர்ணயிக்க டெல்லியில் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது. இதில் TN, புதுவை, மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் அட்டவணை குறித்து முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 20-க்கு பிறகு வாக்குப்பதிவும், மே முதல் வாரத்தில் வாக்கு எண்ணிக்கைக்கும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
News March 12, 2026
கேஸ் தட்டுப்பாடு.. மின் கட்டண சலுகை கிடைக்குமா?

வணிக சிலிண்டர் நிறுத்தப்பட்டதால் ஹோட்டல்களை இழுத்து மூடும் நிலை வந்துள்ளது. இந்நிலையில், மின் அடுப்புகளுக்கு மாறுவதற்கு ஏற்படும் செலவுகளை சமாளிக்க, மின் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் என ஹோட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்படி சலுகை கிடைக்கவில்லை எனில், உணவின் விலை கணிசமாக உயரும். இந்த சுமை மக்களின் தலை மீதே விழும் என்கின்றனர்.


