News April 29, 2024

கொல்கத்தா அணிக்கு 154 ரன்கள் இலக்கு

image

ஐபிஎல் தொடரின் 47ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா அணிக்கு 154 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்த DC அணி முதலில் அதிரடி காட்டினாலும், பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 20 ஓவர்களில் 153/9 ரன்களை எடுத்தது. அதிகப்பட்சமாக குல்தீப் 34, பந்த் 27 ரன்கள் எடுத்தனர். KKR தரப்பில் வருண் 3 விக்கெட்டும், ராணா, அரோரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Similar News

News September 20, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை. ▶குறள் எண்: 464 ▶குறள்: தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சு பவர். ▶பொருள்: களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.

News September 20, 2025

டி20-ல் இந்தியா அரிய சாதனை

image

சர்வதேச டி20-யில் 250 போட்டிகள் என்ற மைல்கல்லை இந்திய அணி எட்டியுள்ளது. நேற்றைய ஓமன் உடனான போட்டியின் போது இந்திய அணி இந்த சாதனையை படைத்துள்ளது. இருப்பினும், அதிக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அணிகளின் பட்டியலில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் 275 போட்டிகளுடன் பாகிஸ்தான் முதல் இடத்திலும், 235 போட்டிகளுடன் நியூசிலாந்து 3-ம் இடத்திலும் உள்ளது.

News September 20, 2025

இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் ஓய்வு

image

இந்திய ரயில்வேயில் 36 ஆண்டுகளாக ரயில்களை இயக்கி வந்த சுரேகா யாதவ் ஓய்வு பெற்றுள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த இவர், 1989-ல் ரயில்வேயில் துணை ஓட்டுநராக பணியை தொடங்கினார். இந்தியா மட்டுமல்ல ஆசியாவிலேயே முதல் பெண் ரயில் ஓட்டுநர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான இவர், சரக்கு ரயில், பயணிகள் ரயில்களை இயக்கியுள்ளார். அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்ற நிலையில், வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

error: Content is protected !!