News April 22, 2025
ஐபிஎல் தொடரை ஆளும் தமிழக வீரர்..!

குஜராத் அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் சாய் சுதர்ஷன், இந்த ஐபிஎல் சீசனில் முதல் ஆளாக 400 ரன்களை கடந்து ஆரஞ்ச் தொப்பியை தனதாக்கிக் கொண்டுள்ளார். இதுவரை 8 போட்டிகளில் விளையாடிய அவர், 5 போட்டிகளில் அரைசதம் அடித்துள்ளார். மொத்தமாக இந்த சீசனில் 42 பவுண்டரிகள், 15 சிக்சர் உள்பட 417 ரன்களை அவர் குவித்துள்ளார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சாய் சுதர்ஷன் இந்திய அணியில் இடம்பெறுவாரா?
Similar News
News April 22, 2025
ஏப்ரல் 22: வரலாற்றில் இன்று

▶ உலக புவி நாள். ▶ 1870 – புரட்சியாளர் விளாடிமிர் லெனின் பிறந்த நாள். ▶ 1962 – எழுத்தாளர் ஜெயமோகன் பிறந்த நாள். ▶ 1992 – மெக்சிக்கோவில் குவாதலகாரா என்ற இடத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 206 பேர் கொல்லப்பட்டனர். ▶ 2006 – இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் உள்ள ஆய்வு மையத்தில் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது. ▶ 2014 – காங்கோவில் ரயில் விபத்து ஏற்பட்டு 60 பேர் உயிரிழந்தனர்.
News April 22, 2025
கூட்டம் சேரலயாம்.. காங். மாவட்டத் தலைவர் சஸ்பெண்ட்

கார்கே நிகழ்ச்சியில் கூட்டம் குறைவாக இருந்ததால் காங். மாவட்டத் தலைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காந்தி, அம்பேத்கரை நினைவுகூரும் வகையில், நாடு முழுவதும் காங். கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பீகாரில் கார்கே பங்கேற்ற கூட்டத்தில் காலி சேர்களே அதிகம் இருந்துள்ளன. இதனால், கூட்டம் நடைபெற்ற புக்சார் மாவட்டத்தின் காங். தலைவர் மனோஜ் குமார், கட்சி பொறுப்புகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
News April 22, 2025
மோடி சிறந்த தலைவர்: USA துணை அதிபர் புகழாரம்

PM மோடி சிறந்த தலைவர் என USA துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பாராட்டியுள்ளார். இந்தியாவுக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் வந்துள்ள ஜே.டி.வான்ஸை வரவேற்ற PM மோடி, அவர்களுக்கு விருந்தளித்து உபசரித்தார். இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் மோடி பதிவிட்டு இருந்தார். அதனை குறிப்பிட்டு, மோடியை சந்தித்தது கவுரவம் என்றும், அவர் சிறந்த தலைவர் எனவும் ஜே.டி.வான்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.