News May 20, 2024

காவிரி உரிமையை தமிழக அரசு நிலைநாட்டும்

image

தமிழகத்தில் காவிரி உரிமையை அனைத்து விதத்திலும் அரசு நிலைநாட்டும் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். கேரளா, கர்நாடகா காவிரி வடிநிலத்தில் மேற்கொள்ளும் சிறுபாசனம் பற்றி கண்காணிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்தியதாக தெரிவித்தார். மேலும், காவிரி தீர்ப்பினை மீறும் விதமாக கேரள, கர்நாடக அரசுகள் செயல்பட்டால் தமிழக அரசு உறுதியோடு எதிர்க்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

Similar News

News November 19, 2025

நகைக்கடன் வாங்குவோருக்கு… HAPPY NEWS

image

கூட்டுறவு வங்கிகளில் 1 கிராம் தங்கத்துக்கு ₹6,000 கடன் வழங்கப்பட்டு வந்தது. இதை ₹7,000 ஆக உயர்த்தி வழங்க கடந்த மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனாலும், வங்கிகளில் பழைய தொகைக்கு மேல் கடன் வழங்க மறுப்பதாக மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கடன் தொகையை உயர்த்தி வழங்கும் அதிகாரப்பூர்வ உத்தரவை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பிறப்பித்துள்ளார். இதையடுத்து நகைக்கடன் தொகை உயரும். SHARE IT

News November 19, 2025

BJP, EC-ன் கூட்டு சதியே SIR : திருமாவளவன்

image

SIR என்பது பாஜகவும், தேர்தல் ஆணையமும் இணைந்து நடத்துகிற ஒரு கூட்டு சதி என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார். எதிர்ப்பு வாக்குகளை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் செயல்திட்டமாக SIR வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், SIR பணிகளை நிறுத்திவிட்டு Summary revision நடைமுறையை EC பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி விசிக போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News November 19, 2025

மகளிர் உரிமைத் தொகை ₹1,500 ஆக உயர்கிறதா?

image

பிஹார் தேர்தல் வெற்றிக்கு பெண்கள் முக்கிய காரணமாக இருந்ததால், மகளிர் உரிமைத் தொகையை உயர்த்துவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விடுபட்ட தகுதியானவர்களுக்கு ஜனவரி முதல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாம். அதேநேரம், தொகையை ₹1,500 ஆக உயர்த்தி வழங்குவது சாத்தியமா என அதிகாரிகளிடம் CM கேட்டதாக தகவல் கசிந்துள்ளது. இந்த யோசனை ஏற்கப்பட்டால் மகளிர் உரிமைத் தொகை ₹1,500 ஆக உயரலாம்.

error: Content is protected !!