News July 7, 2025
பக்தர்களின் பசியாற்ற தவமிருக்கும் தமிழழகன்

செந்திலாண்டவரின் பாதங்களில் உங்களின் கண்ணீரை வைக்க, அவர் உங்களுக்கு உப்புக்காற்றைக் கூட திகட்டவைக்கும்படி வாழ வைப்பார். அப்படிப்பட்ட திருச்செந்தூர் கோயிலின் ராஜகோபுரத்தில் உள்ள பல சிற்பங்களில் முனிவர்களின் சிற்பமும் உண்டு. முக்கியமாக, முனிவர்கள் அமர்ந்து சாப்பிடும் சிற்பம் இங்கு காணப்படுகிறது. இதனாலேயே இக்கோயிலில் 3 வேளையும் அன்னதானம் மூலமாக பசியாற்றுகிறார் என்னழகன் வேலவன்!
Similar News
News July 7, 2025
50 ஆபாச வீடியோக்கள்… சிக்கிய இந்து அமைப்பு நிர்வாகி

கர்நாடகாவில் இந்து அமைப்பு நிர்வாகியின் செல்போனில் 50-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஸ் மீது கல் வீசியதாக சமித் ராஜூ கைதாகி ஜாமினில் வெளியே வந்தார். கைதானபோது அவரது செல்போனை கைப்பற்றி போலீஸ் விசாரித்ததில் இந்த பகீர் தகவல் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரை விசாரிக்க போலீஸ் திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
News July 7, 2025
ஒரே வீட்டில் இப்படி இருந்தால் சமூகநீதி எங்கு இருக்கும்?

சமூகநீதியும், சாதிய ஒழிப்பும் வெறும் சொல்லாகவே இன்றும் இருப்பதாக சீமான் தெரிவித்துள்ளார். மேலும், ஒரே வீட்டில் முதல்வர், துணை முதல்வர் இருக்கும்போது எப்படி சமூகநீதி இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என CM ஸ்டாலின் இன்று அறிவித்த நிலையில், சீமான் இவ்வாறு கூறியுள்ளார்.
News July 7, 2025
கூட்டுறவு வங்கிகள் நகைக் கடன் வழங்க மறுப்பா?

பாமர மக்களின் அவசர நிதித் தேவையை தீர்த்து வைப்பதே நகைக் கடன் தான். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் 3 மாதங்களாக நகைக் கடன் வழங்குவதில்லை என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த அதிகாரிகள், நிதி நெருக்கடி காரணமாக கடன் வழங்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர். அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். உங்க ஏரியாவுல நகைக் கடன் கிடைக்குதா?