News October 2, 2025
இறந்த மனைவி உயிருடன் வந்த ஆச்சரியம்

உ.பி.,யில் வரதட்சனை கொடுமையால் கொல்லப்பட்டதாக கருதப்பட்ட பெண்ணை, 2 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 2023-ல் அப்பெண் மாயமாகியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால், வரதட்சணை கேட்டு கணவர் கொன்றுவிட்டதாக, பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர். இதில் கணவர் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், ம.பி.,யில் அப்பெண்ணை போலீசார் கண்டுபிடித்து, தலைமறைவானதற்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 3, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News October 3, 2025
தூங்குவது கூட பிரச்னையாக உள்ளது: அஜித்குமார்

கார் ரேஸ்களில் கவனம் செலுத்த தொடங்கிய பிறகு சினிமா, வெப் சீரிஸ்களை பார்க்க கூட தனக்கு நேரம் கிடைப்பதில்லை என அஜித்குமார் தெரிவித்துள்ளார். விமானத்தில் பயணிக்கும் போது மட்டுமே ஓய்வு கிடைப்பதாகவும், அந்த நேரத்தில் கூட தூங்கிவிடுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தற்போது தூங்குவதும் பிரச்னையாகி உள்ளதாகவும், ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 3, 2025
இதயம் காக்கும் தாம்பத்ய உறவு

தாம்பத்ய உறவு என்பது இன்பத்தை அளிப்பது மட்டுமல்ல, உங்கள் இதயத்தையும் பாதுகாக்கும் என்கின்றனர் டாக்டர்கள். உடலுறவின் போது உடல் ஃபீல்-குட் ஹார்மோன்களை ரிலீஸ் செய்கிறது. இது ரத்த நாளங்களை தளர்த்தி ரத்தவோட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் ரத்த அழுத்தம், ஸ்ட்ரோக், இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு இயற்கையாகவே கட்டுப்படுத்தப் படுகிறது. இதை நோட் பண்ணிகோங்க தம்பதிகளே.