News March 30, 2024

உச்ச நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது

image

அதிகாரிகள் தங்களது கடமைகளைச் செய்யத் தவறினால், நீதிமன்றங்கள் அதனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்காது என உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளாா். இது தொடர்பாக பேசிய அவர், “அரசாங்கங்களும், அதன் அதிகாரிகளும் தனி நபர் உரிமைகளை பாதிக்கும் வகையில், பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறார்கள். அதனை நீதித்துறை வேடிக்கை பார்க்காது. பலமுறை கடுமையான நடவடிக்கைகளை ஏற்கெனவே எடுத்துள்ளோம்” என்றார்.

Similar News

News January 20, 2026

கோயிலுக்குச் செல்லும் பொழுது..

image

எப்போதும் கோயிலுக்கு செல்லும் போது, சில விஷயங்களை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் *பிறப்பு, இறப்பு தீட்டுக்களுடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது *வெறும் கையுடன் செல்லாமல், குறைந்தபட்சம் பூக்களையாவது கொண்டு செல்ல வேண்டும் *குளிக்காமல் கோயிலுக்குள் செல்லக் கூடாது * கைலி, தொப்பி, முண்டாசு அணிந்துகொண்டு செல்லக்கூடாது *ஈர துணி, அரைகுறை ஆடைகளுடன் கோயிலுக்குள் செல்லக்கூடாது. SHARE IT.

News January 20, 2026

போராட்டத்தை முடித்து வைங்க: நயினார்

image

<<18902841>>சத்துணவு ஊழியர்களுடன்<<>> பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தினை முடித்து வைக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த போராட்டம் அறிவித்திருப்பது திமுக அரசின் நிர்வாகத் தோல்விக்கான சான்று என்றும், போராட்டத்தால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் உடனடியாக பிரச்சினைக்கு தீர்வு காண வேண்ஃஃ.

News January 20, 2026

இன்று ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம்

image

இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று முதல் (ஜன.,20) தொடங்குகிறது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் காலை 9:30 மணிக்கு தொடங்கும் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநர், கடந்த 2 ஆண்டுகளாக முழுமையாக உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!