News March 21, 2024

உச்சநீதிமன்றம் ஆளுநரின் தலையில் கொட்டியுள்ளது

image

உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு சரியான கொட்டு வைத்துள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், அதை பற்றி அவர் கவலைப்பட மாட்டார். தலையில் எவ்வளவு கொட்டினாலும் அவருக்கு வலிக்காது. அவர் இரும்பு தலையர். ஆளுநரின் நடவடிக்கை கவலை அளிப்பதாக உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது அவரின் நடத்தைக்கு சிறந்த எடுத்துக்காட்டு” என்றார்.

Similar News

News April 28, 2025

போர் பதற்றம்… கூடும் நாடாளுமன்ற நிலைக்குழு

image

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே <<16241905>>பதற்றம் <<>>நீடித்து வருகிறது. இதனிடையே பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இன்று மாலை கூடுகிறது. இதில் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

News April 28, 2025

கேரளாவில் பதற்றம்… வெடிகுண்டு மிரட்டல்

image

கேரளாவில் தலைமைச் செயலகம், முதல்வர் அலுவலகம், போக்குவரத்துறை ஆணையர் அலுவலம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் இறங்கியுள்ளனர். மே 2-ம் தேதி PM மோடி கேரளா செல்ல உள்ள நிலையில் இந்த மிரட்டல் வந்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

News April 28, 2025

PM மோடியை விமர்சித்த பாடகி மீது வழக்குப்பதிவு

image

பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் PM மோடியை விமர்சித்த போஜ்புரி பாடகி நேஹா சிங் ரத்தோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘மோடி இப்போது பீகாரில் பஹல்காம் தாக்குதலின் பெயரில் வாக்கு சேகரிப்பார்’ என்று நேஹா கூறியிருந்தார். இந்த வீடியோ பாக். பத்திரிகையாளர்கள் குழு நடத்தும் X ஹேண்டில் வெளியானதை அடுத்து, தேசிய ஒருமைப்பாட்டை குலைப்பதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!