News March 17, 2024
அவசர வழக்காக விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு

கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்குவது தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், நாளை காலை இவ்வழக்கை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்கிறது.
Similar News
News December 31, 2025
IPL-ல் ₹13 கோடி.. ஆனால் தேசிய அணியில் இடமில்லை!

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டனை SRH அணி ₹13 கோடி என்ற பெரும் தொகைக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், 2026 டி20 உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் அவர் இடம்பெறாதது பேசுபொருளாகியுள்ளது. இங்கிலாந்து அணிக்கு ஹேரி புரூக் கேப்டனாக தலைமை தாங்க உள்ளார். துணை கேப்டனாக யாரும் நியமிக்கப்படவில்லை. 2026 பிப்ரவரியில் டி20 உலகக்கோப்பை நடைபெற உள்ளது.
News December 31, 2025
திருத்தணி கொடூரத்தை கண்டு நெஞ்சம் பதறுகிறது: பா.ரஞ்சித்

திருத்தணியில் நடந்த கொடூர செயலை கண்டு நெஞ்சம் பதறுவதாக பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கலாச்சாரத்தை தடுக்க தவறிய ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கே இதற்கு காரணம் எனவும், வடக்கன் என்கிற வெறுப்பு மனநிலையில் செயல்படுவது சமூக சீர்குலைவிற்கே வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ரீல்ஸ் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
News December 31, 2025
ராசி பலன்கள் (31.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


