News April 24, 2025
நாளையும் வெயில் கொளுத்தும் .. வெளியே வராதீங்க

வெயிலின் தாக்கத்தால் மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இன்று கரூர், திருச்சி, மதுரை, ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 104.36 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது. நாளையும் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும், காலை 11 முதல் மதியம் 3 மணி வரை மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News April 25, 2025
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா..!

பேஸ்பால் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. அதேநேரத்தில், இந்திய மகளிர் பேஸ்பால் அணி, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றில் 2-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய மகளிர் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
News April 25, 2025
பேராசிரியரால் பாலியல் வன்கொடுமை… மாணவி பலி

சென்னை கேளம்பாக்கம் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தமிழ்நாடு உடற்கல்வியியல் கல்லூரி மாணவி உயிரிழந்தார். உதவி பேராசியர் ராஜேஷ்குமரால் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்பட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காததால் அவர் உயிரிழந்தார்.
News April 25, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ ஏப்ரல் 25- சித்திரை- 12 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶ குளிகை: 7:30 AM – 9:00 AM ▶ திதி: த்ரயோதசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶ பிறை: தேய்பிறை