News August 3, 2024
பாளையில் சதம் அடித்த வெயில்

தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. அதற்கு ஈடாக வெயிலும் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. இதில், நெல்லை மாவட்டம் பாளையில் 101.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 8, 2025
நெல்லையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கான முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நாளை (நவ.08) அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற பல்வேறு சேவைகளை இந்த குறைதீர் கூட்டத்தில் விண்ணப்பம் அளித்து பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
News November 8, 2025
நெல்லை: போஸ்டர் ஒட்டியதற்கு கொலை; கோர்ட் அதிரடி தீர்ப்பு

நெல்லை கொங்கன்தாம்பாறை சமுதாய நலக்கூடம் அருகே கண்ணீர் அஞ்சலி வால் போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் இசக்கி பாண்டி(23) என்பவர் 2013ம் ஆண்டு வெட்டி படுகொலை செய்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கபட்டது. பச்சாண்டி(39), இன்பராஜ்(39), முத்துக்குமார்(37) ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ.1500 அபராதமும் விதித்து நெல்லை மாவட்ட 3 வது கூடுதல் அமர்வு நீதிபதி ராபின்சன் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
News November 8, 2025
நெல்லையில் ரூ.69 கோடியில் பிரம்மாண்ட நூலகம்

நெல்லையில் ரூ.69 கோடியில் காயிதே மில்லத் பெயரில் பிரம்மாண்ட நூலகம் அமைக்க திட்டமிடப்பட்டது. சில மாதங்களுக்கு முன்னர் ஐகிரவுண்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள இடத்தை அமைச்சர்கள், அதிகாரிகள் இதற்கு தேர்வு செய்தனர். இப்போது நூலகம் அமைக்க அரசு டெண்டர் விடுத்துள்ளது. அதில் 2 அடுக்கு கட்டடத்தில் படிப்பகம், மினி திரையரங்கம் மாற்றுத்திறனாளிகளுக்கு அறை, ஆய்வரங்கம் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளது.


