News May 15, 2024
கோடை மழை வெளுத்து வாங்குகிறது

தமிழகத்தில் பல மாவட்டங்களில் சூறைக் காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அந்த வகையில், விழுப்புரம், தஞ்சை, விருதுநகர், கடலூர், சேலம், நெல்லை, குமரி மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் தணிந்ததாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Similar News
News November 17, 2025
தேனி மக்களே இது கட்டாயம்..!

தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள் உள்ளன. இந்த உள்ளாட்சிகளில் குறிப்பிட்ட உள்ளாட்சி அமைப்புகள், போலீசாரின் அனுமதி இன்றி தேசிய நெடுஞ்சாலை, மாநிலச் சாலைகளில் தள்ளுவண்டி கடைகள் வைக்க அனுமதி வழங்குகின்றன. தெருவோர கடை உரிமையாளர்கள் உள்ளாட்சிகளில் அனுமதி பெற்றிருந்தாலும் அதற்கான ஆவணங்களை போலீசாரிடம் காண்பித்து ஒப்புதல் பெறுவது கட்டாயம் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
News November 17, 2025
தூத்துக்குடி: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க

தூத்துக்குடி மக்களே; ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HI-ன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார்-ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும். மற்றவர்களும் இதை தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News November 17, 2025
மதுரை மக்களே! SIR-தொடர்பாக ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மதுரை 10 தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த நவ. 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்களுக்கு பதிவை எளிமைப்படுத்த வரும் 18, 19 மற்றும் 20 தேதிகளில் சிறப்பு தீவிர திருத்தும் தொடர்பாக, அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதனை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் பிரவீன் குமார் அறிவித்துள்ளார்.


