News May 15, 2024
கோடை மழை வெளுத்து வாங்குகிறது

தமிழகத்தில் பல மாவட்டங்களில் சூறைக் காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அந்த வகையில், விழுப்புரம், தஞ்சை, விருதுநகர், கடலூர், சேலம், நெல்லை, குமரி மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் தணிந்ததாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Similar News
News November 23, 2025
திருச்செந்தூர்: ஐயப்ப பக்தர்களுக்கு.. போலீஸ் அறிவிப்பு!

திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் தங்களது வாகனங்களை சாலை ஓரங்களில் அங்கும் இங்கும் நிறுத்தாமல், போக்குவரத்துக்கும், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படா வண்ணம் பாதுகாப்பாக நிறுத்த வேண்டும் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. தொடர் மழை காரணாமாக தற்காலிக நிறுத்துமிடங்கள் (Parking) பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
News November 23, 2025
கூட்டணி: குழப்பத்தை ஏற்படுத்தும் காங்., அறிக்கை

காங்., சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை அமைத்ததால், TVK உடன் கூட்டணி இல்லை என்று அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. ஆனால், காங்., வெளியிட்ட அறிக்கையில் திமுக என்றோ, இண்டியா கூட்டணி என்றோ எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. மொட்டையாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளது. இதனால், விஜய் உடன் கூட்டணி பேச்சு தொடர்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
News November 23, 2025
காலையில் மாரடைப்பு.. காரணம் இதுதான்!

காலையில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், ஏனெனில் உடலில் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு அதிகரிப்பது காரணமாகிறது. இது உடலில் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் வெளியாவதால் ஏற்படுகிறது. இரவில் ஏற்படும் நீரிழப்பும் மாரடைப்பை தூண்டுவதற்கு ஒரு காரணமாக அமைகின்றன. முறையான தூக்கம், உடற்பயிற்சியால் இந்த ஆபத்தை தடுக்க முடியும் என டாக்டர்கள் கூறுகின்றனர். உஷாரா இருங்க..!


