News May 15, 2024
கோடை மழை வெளுத்து வாங்குகிறது

தமிழகத்தில் பல மாவட்டங்களில் சூறைக் காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அந்த வகையில், விழுப்புரம், தஞ்சை, விருதுநகர், கடலூர், சேலம், நெல்லை, குமரி மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் தணிந்ததாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Similar News
News September 11, 2025
உதயநிதி ஸ்டைலில் அன்புமணி எடுத்த செங்கல்!

2021 தேர்தல் பிரசாரத்தின்போது, எய்ம்ஸ் ஹாஸ்பிடலின் கட்டுமான பணிகள் தொடங்கப்படாததை விமர்சிக்கும் வகையில், AIIMS என எழுதப்பட்ட செங்கலை காட்டி உதயநிதி பரப்புரை மேற்கொண்டார். இந்நிலையில், கடலூரில் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்காக திமுக அரசால் நாட்டப்பட்ட அடிக்கல்லை தேடி கண்டுபிடித்து கொண்டு வந்ததாக, அன்புமணி கூறினார். கல்லூரி கட்டுமானத்தை அரசு விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
News September 11, 2025
காலையில் உடல் சுறுசுறுப்பாக இருக்க இந்த தேநீர் குடிங்க!

சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும், உடலை சுறுசுறுப்பாக்கவும் மசாலா டீ உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
* கிராம்பு, பச்சை ஏலக்காய், மிளகுத்தூள், இலவங்கப்பட்டை & பெருஞ்சீரகம் ஆகியவற்றை மிதமான தீயில் வறுத்து எடுக்கவும்.
*இதனுடன் ஜாதிக்காய், உலர்ந்த இஞ்சி தூள் & குங்குமப்பூ சேர்த்து பொடியாக்கி கொள்ளவும்.
*டீ செய்யும் போது, அதில் இந்த பொடியை கலந்தால், மசாலா டீ ரெடி. SHARE IT.
News September 11, 2025
4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இன்று விடுமுறை

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி இன்று (செப்.11) 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மதுபான கடைகள், பார்கள் செயல்படாது என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். உத்தரவை மீறி மது விற்பனை செய்தால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. SHARE IT.