News March 22, 2025
16 ஆண்டுகளாக கல்லூரி மாணவிகளுக்கு நேர்ந்த அவலம்!

உ.பி.யில் கல்லூரி மாணவிகளை மிரட்டி பேராசிரியர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புவியியல் பேராசிரியரான ரவ்னீத், அதிக மதிப்பெண் போடுவதாக ஆசை காட்டியும், பெயில் ஆக்கிவிடுவேன் என மிரட்டியும் 16 ஆண்டுகளாக இந்த கொடூரத்தை செய்து வந்துள்ளார். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், மாணவிகளுடன் தனிமையிலிருந்த பல வீடியோக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். So Sad!
Similar News
News September 14, 2025
ITR தாக்கல் செய்ய நாளை கடைசி

2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு ITR தாக்கல் செய்ய நாளையுடன் அவகாசம் முடிகிறது. வழக்கமாக ஜூலை 31-ம் தேதியுடன் கணக்கு தாக்கல் நிறைவடையும் நிலையில் இம்முறை அவகாசம் செப்.15 வரை நீட்டிக்கப்பட்டது. நாளைக்குள் கணக்கு தாக்கல் செய்ய தவறினால் அபராதம் செலுத்த நேரிடும். இந்நிலையில், இம்முறை 6 கோடிக்கும் அதிகமானோர் கணக்கு தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
News September 14, 2025
நல்லகண்ணு விரைவில் டிஸ்சார்ஜ்: மருத்துவ குழு

CPI மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ராஜீவ் காந்தி ஹாஸ்பிடல் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 22-ம் தேதி வீட்டில் தடுமாறி விழுந்து தலையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் அவரை 24 மணிநேரமும் டாக்டர்கள் குழு கண்காணித்து வருவதாகவும், தற்போது இயற்கையான முறையில் சுவாசித்து வரும் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் கூறியுள்ளனர்.
News September 14, 2025
காலையில் எழுந்தவுடன் செய்யக்கூடாத விஷயங்கள்

காலையில் எழுந்ததும் நாம் என்ன செய்கிறோம் என்ற விஷயம் தான் நமது நாளே எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கிறது. உதாரணத்துக்கு, காலையில் எழும்போதே பரபரப்பாக எழுந்தால், அன்றைய நாளே நிதானமாக போகாது, செய்யும் விஷயங்களை எல்லாம் பதற்றத்தோடே செய்வீர்கள். இதுபோல, காலையில் எழுந்ததும் செய்யவே கூடாத பல விஷயங்கள் இருக்கிறது. அது என்ன என்பதை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.