News April 26, 2025
நினைவுகளின் விசித்திர அனுபவம்

நினைவுகள் எப்போதும் சிறப்பானவை தான். கடந்த காலத்தில் நாம் அழுத கணங்களை நினைவுகூர்ந்து, அட இதற்கா நாம் அவ்வளவு கவலைப்பட்டோம் என்று சில சமயங்களில் நாம் சிரிக்கிறோம். அதேநேரம் நாம் சிரித்து மகிழ்ந்த காலங்களை நினைத்து, மீண்டும் அந்த காலம் வாராதா என்று ஏங்கி அழவும் செய்கிறோம். இது தானே வாழ்க்கை!
Similar News
News April 26, 2025
டைனோசர் காலத்தில் வாழ்ந்த உயிரினம் கண்டுபிடிப்பு..!

பிரேசில் நாட்டில் 11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த எறும்பின் புதைபடிமத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Hell Ant எனப்படும் இந்த வகை எறும்பு, ஹைடோமைர்மெசினே துணைக் குடும்பத்தைச் சேர்ந்ததாம். சுண்ணாம்பு கல்லில் இருந்து இந்த புதைபடிமம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், எறும்புகளின் பரிணாம வளர்ச்சியை கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
News April 26, 2025
பில்கேட்ஸின் தன்னம்பிக்கை வரிகள்..!

▶ வெற்றி ஒரு மோசமான ஆசிரியர். அது புத்திசாலிகளை மயக்கி தோல்வியே இல்லை என்ற எண்ணத்தை தூண்டும். ▶ வெற்றியைக் கொண்டாடுவது சிறப்பானது. ஆனால் தோல்வியின் படிப்பினைகளைக் கவனிப்பதும் அவசியம். ▶ உலகில் உள்ள எவருடனும் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள்… அப்படிச் செய்தால், உங்களை நீங்களே அவமதித்துக் கொள்கிறீர்கள் என அர்த்தம். ▶ பிரச்னைகள் இருக்கும் இடத்திலேயே அதற்கான தீர்வையும் தேடுகிறேன்.
News April 26, 2025
சமந்தா அழுதால் நானும் அழுவேன்: பிரபல இயக்குநர்

நடிகை சமந்தா குறித்து இயக்குநர் சுதா கொங்கரா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். தான் சமந்தாவின் மிகப் பெரிய ரசிகை என்றும், 5 ஆண்டுகளாக அவருடன் டச்சில் இருப்பதாகவும் சுதா தெரிவித்துள்ளார். மேலும், சமந்தா அழுதால், தானும் அழுவேன் என தெரிவித்த அவர், சமந்தாவின் போராடும் குணம் தனக்கு பலம் தருவதாக குறிப்பிட்டார். ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் மிகவும் பிடிக்கும் என்றும் சுதா வேடிக்கையாக கூறியுள்ளார்.