News October 20, 2025
அண்ணியை மனைவியாக்கும் விசித்திர வழக்கம்!

இமாச்சலில் உள்ள டிரான்ஸ்கிரி பகுதியில் வசிக்கும் ‘ஹட்டி’ என்ற பழங்குடியின மக்கள் மத்தியில் ஒரு விசித்திரமான வழக்கம் உள்ளது. அதாவது, அச்சமூகத்தை சேர்ந்த ஆணுக்கு திருமணம் முடிந்ததுமே அவனது சகோதரர்கள் எத்தனை பேர் இருந்தாலும், அவர்களுக்கும் அப்பெண் மனைவியாகி விட வேண்டுமாம். வறுமையும், சொத்து பிரிந்துவிடக் கூடாது போன்ற காரணங்களுக்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த காலத்திலுமா இப்படி?
Similar News
News March 11, 2026
தமிழ் வில்லன் நடிகர் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

பிரபல நடிகர் தக்காளி சீனிவாசன் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். மனசுக்குள் மத்தாப்பு, நாளைய மனிதன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த இவர், கமல் நடித்த சூரசம்ஹாரம் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தார். அவரது மறைவிற்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது இறுதி சடங்குகள் இன்று பெங்களூரிலேயே நடைபெறவுள்ளன.
News March 11, 2026
முடிவை மாற்றினார் OPS

ராமநாதபுரம் MP நவாஸ் கனிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரி, OPS சென்னை HC-யில் OPS மனு தாக்கல் செய்துள்ளார். 2024-ல் NDA சார்பில் ராமநாதபுரத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த OPS, நவாஸ் கனியின் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி வழக்கு தொடுத்தார். இவ்வழக்கில் 2 முறை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்திருந்த OPS, தற்போது திமுகவில் இணைந்ததால் அவ்வழக்கை வாபஸ் பெறுகிறார்.
News March 11, 2026
தினமும் தேங்காய் பால் குடிப்பதால் என்ன ஆகும்?

தினமும் தேங்காய் பால் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. ➤நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகும், அடிக்கடி ஏற்படும் சளி, நுரையீரல் பிரச்னைகள் சரியாகும், வயிற்றுப் புண், வயிற்றுப் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். ➤இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் & இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. ➤பால் ஒவ்வாமை இல்லாதவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் இதை குடிக்க வேண்டும் என டாக்டர்கள் சொல்றாங்க. SHARE.


