News April 2, 2024
500 ரூபாய் 5 லட்சம் ஆன கதை

மருத்துவர் தன்மயி மோதிவாலா என்பவர் X தளத்தில் சுவாரஸ்யமான செய்தி ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அவருடைய பெற்றோர் 1994ஆம் ஆண்டு ₹500 மதிப்பிலான SBI வங்கியின் பங்குகளை வாங்கியிருக்கின்றனர். அதன்பின், அவர்களே அதனை மறந்து போயிருக்கின்றனர். எதேச்சையாக அந்த பங்குகள் மருத்துவர் மோதிவாலாவிடம் கிடைக்க, அதன் மதிப்பு தற்போது ₹5 லட்சம் என்று தெரிய வந்துள்ளது. பங்குச் சந்தை முதலீட்டின் சக்தியை பாருங்க.
Similar News
News November 10, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க..
News November 10, 2025
மோடியும், அமித்ஷாவும் வாக்கு திருட்டில் சிக்குவார்கள்: ராகுல்

மோடியும், அமித் ஷாவும் ஒருபோதும் நியாமான முறையில் தேர்தலில் வெற்றி பெற்றது இல்லை என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். EC ஆணையருக்கும் வாக்கு திருட்டில் தொடர்புள்ளதாகவும், மோடியும், அமித்ஷாவும் வாக்கு திருட்டு விவகாரத்தில் இருந்து தப்ப முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பல மாநிலத்தில் வாக்குதிருட்டின் மூலம் வெற்றிபெற்ற பாஜக, பிஹாரிலும் அதேபோன்று வெற்றி பெற்றுவிடலாம் என நினைப்பதாக கூறினார்.
News November 10, 2025
வெள்ளை முடி இருக்கா? அப்போ நல்லது தான்!

தலைமுடி நரைப்பதும் ஒருவகையில் நல்லது என்கின்றனர் ஜப்பானிய விஞ்ஞானிகள். கேன்சரை உண்டாக்கும் செல்களை உடல் அழிக்கும் செயல்முறையில், முடி நிறம் இழப்பதாக கூறுகின்றனர். மெலனோசைட்கள் என்ற செல்கள் தான், நம் தலைமுடி கருநிறமாக இருப்பதற்கு காரணம். கேன்சரை ஏற்படுத்தும் செல்களை அழிக்கும் செயல்பாட்டின் போது, இவை தங்களை தாங்களே அழித்துக் கொள்வதால், முடி நிறம் இழக்கிறதாம். ஆகவே, கிரே ஹேர் பார்த்து கவலைபடாதீங்க.


