News September 11, 2025

சூறாவளி கிளம்பியதே.. WCக்கு குறிவைத்த ரோஹித்

image

இந்திய அணியின் ODI கேப்டன் ரோஹித் சர்மா தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரோஹித் சில மாதங்களாக கிரிக்கெட் களம் காணாமல் இருந்தார். இந்நிலையில் ஆஸி. எதிரான ODI தொடருக்கு தயாராக பயிற்சியை தொடங்கியுள்ளார். ரோஹித் அணியில் இருந்து ஓரங்கட்டப்படுவதாக வதந்திகள் பரவினாலும், 2023ல் தவறவிட்டதை 2027ல் அடையும் எண்ணத்துடன் அவர் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Similar News

News September 11, 2025

வியாழக்கிழமைகளில் குரு பகவானின் முழு அருள் பெற…

image

ஓம் விரு‌ஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குருஹ் ப்ரசோதயாத்
பொருள்:
இடப்பக்கத்தில் கொடியை வைத்திருக்கும் குரு பகவானே, எப்போதும் உங்கள் அருட்கரங்களால் அருள்மழை பொழியும் ப்ரகஸ்பதியே, என் வாழ்வில் உள்ள தீமைகளை அகற்றி நன்மைகளை அளித்திட வேண்டுகிறேன். Share it.

News September 11, 2025

இவரை கண்டுபிடிச்சு குடுங்க: லாரன்ஸ்

image

வாழ்வாதாரத்திற்காக போராடும் 80 வயது முதியவரை கண்டுபிடிக்க உதவுமாறு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை மின்சார ரயிலில் முதியவர் ஒருவர் வாழ்வாதாரத்திற்காக அதிரசம், போளி விற்பதாக SM-ல் தகவல் பரவியது. இந்நிலையில், ராகவா லாரன்ஸ் அவரை தேடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ₹1 லட்சம் கொடுக்க தயார் எனவும் அவருடைய விவரம் தெரிந்தவர்கள் தனக்கு தகவல் அளிக்குமாறும் லாரன்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

News September 11, 2025

₹2,000 மகளிர் உரிமை தொகை.. வெளியான தகவல்

image

மகளிர் உரிமை தொகையை ₹2,000ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான சாத்திய கூறுகளை ஆராய நிதித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2026 தேர்தலில் அதிமுக வென்றால் ₹2,000 உரிமை தொகை வழங்கப்படும் என EPS தெரிவித்த நிலையில், ஆளும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நிதித்துறை சாதகமான அறிக்கை தந்தால் வரும் ஜன. முதல் உரிமை தொகை ₹2,000ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

error: Content is protected !!