News April 10, 2024
அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்த வேண்டும்

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் இறுதிச் சடங்கை அரசு மரியாதையுடன் நடத்த காங்., எம்பி திருநாவுக்கரசர் கோரிக்கை வைத்துள்ளார். ஆர்.எம்.வீரப்பன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த அவர், அரசியல் உலகில் பலரை உருவாக்கிய பெருமைக்குரியவர். எந்த வித ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத நேர்மையான மனிதர். மூத்த அரசியல்வாதியான அவரது இறுதிச் சடங்கை அரசு மரியாதையுடன் நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Similar News
News April 24, 2025
+2-க்கு அப்புறம் டிஜிட்டல் மார்க்கெட்டிங்

எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்பு ஒரு சூப்பர் சாய்ஸ். டிப்ளமோவில் தொடங்கி முதுகலை படிப்பு வரை இருக்கிறது. Market Research Analyst, Content Marketer/Manager என பல வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. தொடக்க சம்பளமாகவே ₹25,000 – ₹40,000 வரை வழங்கப்படுகிறது. ஃபேஸ்புக், கூகுள் தளங்களில் இலவசமாக கிளாஸ் எடுக்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.
News April 24, 2025
டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் விலகல்

அரசு ஊழியர்களை பணியைவிட்டு நீக்குதல், அரசு செலவுகளை குறைத்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்யும் டாட்ஜ்(DOGE) துறை தலைவர் பதவியிலிருந்து எலான் மஸ்க் விலகியுள்ளார். USA அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு உருவாக்கப்பட்ட இந்த புதிய துறை மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அடுத்த மாத இறுதிக்குள் டிரம்ப் நிர்வாகத்திலிருந்து வெளியேறுவேன் என்றும் மஸ்க் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
News April 24, 2025
இந்தியாவில் பாமாயில் இறக்குமதி அதிகரிப்பு

5 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவின் பாமாயில் இறக்குமதி உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பரில் விலை குறைவான சோயாபீன் எண்ணெயின் சந்தைப்பங்கு அதிகரித்ததால் வீழ்ச்சியடைந்த பாமாயில் இறக்குமதி, வருகிற ஜூலை – செப்டம்பரில் 7 லட்சம் டன் அதிகரிக்கும் என எண்ணெய் டீலர்கள் கூறுகின்றனர். தற்போது சோயாபீன் எண்ணெய் விலையை விட பாமாயில் விலை குறைந்ததால், அதன் தேவை அதிகரித்துள்ளதும் இறக்குமதி உயர்வுக்கு காரணம்.