News October 23, 2024
பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் நடிகர் டிகாப்ரியோவின் பெயர்

புதிய பாம்பு இனத்திற்கு லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கொரோனா சமயத்தில் இமயமலையில் விரேந்தர் பரத்வாஜ் என்பவர், புதிய வகை பாம்பு ஒன்றை கண்டுபிடித்தார். இந்த பாம்பு வகைக்கு லியோனார்டோ டிகாப்ரியோ பெயரை குறிக்கும் விதமாக ‘ஆங்குவிகுலஸ் டிகாப்ரியோய்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம், பல்லுயிர் பாதுகாப்பு தொடர்பாக டிகாப்ரியோ விழிப்புணர்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 16, 2025
IPL: எந்த அணியிடம் எவ்வளவு உள்ளது?

2026 IPL தொடருக்கான மினி ஏலம் இன்று (டிச.16) அபு தாபியில் நடைபெற உள்ளது. இதில், எந்த அணி, எந்த வீரரை, எவ்வளவு தொகைக்கு ஏலத்தில் எடுப்பார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் நிலவுகிறது. இந்நிலையில், எந்த அணியிடம் எவ்வளவு இருப்புத் தொகை உள்ளது என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 16, 2025
ஜோர்டன் அரசரின் அர்ப்பணிப்பை பாராட்டிய PM

அரசுமுறை பயணமாக ஜோர்டன் சென்றுள்ள PM மோடி, மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடனான கலந்துரையாடல் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக
தெரிவித்துள்ளார். இந்தியா – ஜோர்டான் உறவுகளில் மன்னரின் தனிப்பட்ட அர்ப்பணிப்பு முக்கியமானது எனவும் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 75 ஆண்டுகள் ராஜாங்க உறவு வரும் காலங்களில் புதிய ஆற்றலுடன் முன்னேற்றமடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 16, 2025
நாசருக்கு கலைஞர் விருதை வழங்கிய CM ஸ்டாலின்

சென்னையில் முத்தமிழ் பேரவையின் சார்பில் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் நாசருக்கு கலைஞர் விருதை வழங்கி CM ஸ்டாலின் கௌரவித்தார். பின்னர் பேசிய CM, கலைஞர் விருது பெறுவதற்கு நாசர் மிகமிக பொருத்தமானவர் என கூறினார். தொடந்து பேசிய நாசர் கலையை ஆழமாக பயன்படுத்த வேண்டும் என்ற பொறுப்பை இந்த விருது கொடுத்துள்ளதாக நெகிழ்ச்சியுடன்
தெரிவித்தார்.


