News October 23, 2024

பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் நடிகர் டிகாப்ரியோவின் பெயர்

image

புதிய பாம்பு இனத்திற்கு லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கொரோனா சமயத்தில் இமயமலையில் விரேந்தர் பரத்வாஜ் என்பவர், புதிய வகை பாம்பு ஒன்றை கண்டுபிடித்தார். இந்த பாம்பு வகைக்கு லியோனார்டோ டிகாப்ரியோ பெயரை குறிக்கும் விதமாக ‘ஆங்குவிகுலஸ் டிகாப்ரியோய்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம், பல்லுயிர் பாதுகாப்பு தொடர்பாக டிகாப்ரியோ விழிப்புணர்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 29, 2025

திருவள்ளூர் வருகிறார் இ.பி.எஸ்!

image

திருவள்ளூர்: திருத்தணி அடுத்துள்ள விரகநல்லூர் பகுதியில் இன்று(டிச.29) எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்து, பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில், அப்பகுதியில் அவரை வரவேற்க கட்-அவுட், பேனர்கள் வைக்கப்பட்டு, சிறப்பான ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இன்று மாலை அவர் வருகை தரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 29, 2025

பொண்ணு எங்க வந்துச்சி.. புண்ணுதான் வந்துச்சி

image

சென்னையில் வடமாநில இளைஞர் ஒருவர், ஃபேஸ்புக்கில் உல்லாசத்திற்காக பெண் வேண்டும் என கேட்டு மர்ம நபருக்கு ₹28,000 பணம் அனுப்பியுள்ளார். பெண் வராததால், ஃபேஸ்புக் ஆசாமியிடம் கேட்டுள்ளார். அதற்கு பொட்டாசியம் பெர்மாங்கனேட்டை வாங்கி, அதில் சர்க்கரை கலந்து கையில் தேய்த்துக்கொள், பெண் வருவார் என கூறியுள்ளனர். இதனை அந்த இளைஞர் செய்ய, கையில் புண் தான் வந்துள்ளது. பின்னரே, இது ஃபேக் ஐடி என தெரிய வந்துள்ளது.

News December 29, 2025

கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு தொடங்க அனுமதி!

image

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் செப்டம்பர் வரை அகழாய்வு பணிகள் நடைபெறும். அதன்படி வரும் ஜனவரியில் திறந்தவெளி அருங்காட்சியகம் திறந்த பின்னர் அகழாய்வு பணிகள் தொடங்கும். இதுவரை சுமார் 20,000 தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், 11-ம் கட்ட ஆய்வு மூலம் வைகை நாகரிகத்தின் எஞ்சிய ரகசியங்கள் வெளிவரும்.

error: Content is protected !!