News March 19, 2024
புறநானூறு படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்

சூரரைப்போற்று படத்திற்கு பிறகு சூர்யா, சுதா கொங்கரா, ஜி.வி.பிரகாஷ் கூட்டணி கைக்கோர்த்த படம் ‘புறநானூறு’. 2023 நவம்பரிலேயே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குமென கூறப்பட்ட நிலையில், இன்னமும் தொடங்கவில்லை. இது குறித்து நடிகர் சூர்யா தனது X பக்கத்தில், ‘புறநானூறு படத்திற்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. உங்களுக்கு சிறப்பான ஒன்றை தர வேலை செய்து வருகிறோம். விரைவில் படப்பிடிப்பில் சந்திப்போம்’ என்றார்.
Similar News
News October 31, 2025
கொரோனாவை விட கொடுமையான காற்று மாசு

உலக அளவில் 2024-ம் ஆண்டில் மட்டும் காற்று மாசுபாட்டால் 81 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். குறிப்பாக, இந்தியாவிலும் பல உயிர்களை காற்று மாசு கொன்று வருவதாக AIIMS முன்னாள் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார். கடந்த சில நாள்களாக டெல்லியில் காற்று தரக் குறியீடு மிகவும் மோசமானதாக செல்வதால், மக்கள் அவதியுற்றுள்ளனர்.
News October 31, 2025
அதானி, அம்பானிக்காக பாஜக செயல்படுகிறது: ராகுல் காந்தி

பிஹாரில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மோடி – ராகுல் காந்தி இடையே கடுமையான வார்த்தை போராகவும் மாறியுள்ளது. ஷேக்புராவில் பரப்புரை மேற்கொண்ட ராகுல், பிஹாரில் தொழில்களை தொடங்க பாஜக விரும்பவில்லை என்று குற்றஞ்சாட்டினார். ஏனென்றால், அதானி & அம்பானி போன்றோர் சீன பொருள்களை பிஹார் உள்பட இந்தியாவில் விற்பனை செய்ய பாஜகவினர் விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
News October 31, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 505 ▶குறள்: பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். ▶பொருள்: ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.


