News November 24, 2024
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. ‘ப.பாண்டி’, ‘ராயன்’ படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கும் இப்படத்தில், அவரது சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ் உள்பட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், கடைசி நாள் படப்பிடிப்பு புகைப்படம் வெளியாகியுள்ளது.
Similar News
News November 14, 2025
இரண்டாக உடையுமா இந்தியா?

திபெத் பீடபூமியில் சமீபமாக அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இதை ஆராய்ந்த போது, இமயமலையின் கீழே இந்தியா இரண்டாக உடைந்து வருகிறது என்ற விஷயத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்திய புவித்தட்டின் (tectonic plate) மேல்பகுதி வடக்கே நகர்ந்து வரும் நிலையில், கீழ்ப்பகுதி உடைந்து பூமிக்குள் மூழ்கி வருகிறது. இதனால், எதிர்காலத்தில் இந்தியாவின் ஒருபகுதி தனியே பிரிந்து, தீவாக கூட மாற வாய்ப்புண்டாம்.
News November 14, 2025
பிஹாரை கைப்பற்றிய மோடி அலை

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 92 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக-ஜேடியுவின் NDA கூட்டணி 204 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் மோடி அலை என்று கூறப்படுகிறது. மோடி எங்கெல்லாம் ரோடு ஷோ நடத்தினாரோ, எங்கெல்லாம் பேசினாரோ அங்கெல்லாம் பாஜக முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மோடி அலை எடுபடுமா?
News November 14, 2025
சற்றுமுன்: பிரபல நடிகை காலமானார்

பழம்பெரும் பாலிவுட் நடிகை காமினி கௌசல்(98) காலமானார். 1946-ல் NEECHA NAGAR படத்தின் மூலம் திரையுலகில் அவர் அறிமுகமானார். இந்தியாவில் இருந்து இந்த ஒரு படம் மட்டுமே கான் பட விழாவில் Palme d’Or விருது வென்றுள்ளது. திலீப் குமார் உள்பட பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த காமினி, கடைசியாக லால் சிங் சத்தா படத்தில் நடித்திருந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP


