News November 24, 2024
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. ‘ப.பாண்டி’, ‘ராயன்’ படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கும் இப்படத்தில், அவரது சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ் உள்பட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், கடைசி நாள் படப்பிடிப்பு புகைப்படம் வெளியாகியுள்ளது.
Similar News
News November 21, 2025
BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. இன்று வர்த்தக நேர முடிவில் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 89.46 ஆக சரிந்தது. நேற்றுடன் ஒப்பிடுகையில், இது 0.86% சரிவாகும். அதாவது, ஒரே நாளில் 67 பைசா சரிந்துள்ளது. டாலரின் தேவை அதிகரித்தது, ரிசர்வ் வங்கியின் ஆதரவு குறைந்தது போன்றவை இச்சரிவுக்கு காரணம். ரூபாய் மதிப்பு சரிவால், நமது இறக்குமதி செலவுகள் உயரும்.
News November 21, 2025
ஹலோ ஹலோ சுகமா.. ட்ரை பண்றீங்களா?

‘ஹலோ’ என்ற வார்த்தையை இன்று ஒரு சிறப்பு தினமாக கொண்டாடுகிறோம். 1973- ம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் எகிப்து, சிரியா நாடுகளுக்கு இடையே நடைபெற்ற போரில், பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கில் ‘உலக ஹலோ தினம்’ என்பதை ஃபிரியன், மைக்கேல் சகோதரர்கள் அறிமுகப்படுத்தினர். இந்த நாளில், பிரிந்த உறவுகளிடம் கூட ஹலோ சொல்லி உறவை புதுமையாக்கலாம். நீங்கள் யாருக்கு ஹலோ சொல்ல போறீங்கனு கமெண்ட் பண்ணுங்க.
News November 21, 2025
பட நிகழ்ச்சியில் பாடல் பாடியதற்கு ₹1 கோடி சம்பளமா?

பட தயாரிப்பை விட, அதன் புரமோஷனுக்கே அதிகம் செலவிடுவதற்கு சமீபத்தில் நடந்த ‘வாரணாசி’ பட நிகழ்ச்சியே சாட்சி. டைட்டில் ரிலீஸ் நிகழ்ச்சிக்கு மட்டும் ₹27 கோடி செலவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், மற்றுமொரு ஆச்சரியமடைய வைக்கும் செய்தியும் வெளியாகியுள்ளது. இதே ஈவென்ட்டில், ஒரு பாடல் நிகழ்ச்சியை நடத்திய ஸ்ருதிஹாசனுக்கு ₹1 கோடி சம்பளம் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


