News November 24, 2024

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு

image

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. ‘ப.பாண்டி’, ‘ராயன்’ படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கும் இப்படத்தில், அவரது சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ் உள்பட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், கடைசி நாள் படப்பிடிப்பு புகைப்படம் வெளியாகியுள்ளது.

Similar News

News November 20, 2025

CINEMA 360°: ‘காந்தா’ படம் 5 நாட்களில் ₹29 கோடி வசூல்

image

*சசிகுமார் நடித்துள்ள “MY LORD” படத்தின் முதல் சிங்கிள் வெளியானது. *ஆதரவற்றோர் இல்லத்தில் தனது பிறந்தநாளை நடிகர் அருண் விஜய் கொண்டாடினார். *நிவின் பாலி நடிக்கும் ‘சர்வம் மாயா’ டிசம்பர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *லோகா வெற்றிக்கு பின் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் புதுப்படம் பூஜையுடன் தொடங்கியது. *துல்கரின் ’காந்தா’ படம் 5 நாள் முடிவில் ₹29 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

News November 20, 2025

சேலத்தில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறாரா விஜய்?

image

கரூர் அசம்பாவிதத்திற்கு பின் விஜய் தனது பரப்புரையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். தற்போது அவர் சேலத்தில் இருந்து தனது பரப்புரையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்ட வருவதாகவும் கூறப்படுகிறது. எந்த இடத்தில் பொதுக்கூட்டம், போலீஸ் அனுமதி உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசித்து விரைவில் விஜய் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 20, 2025

அன்புமணியின் பேச்சு குழந்தைத்தனமானது: TRB ராஜா

image

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக அரசு பொய்சொல்வதாக அன்புமணி வைத்த குற்றச்சாட்டுக்கு TRB ராஜா பதில் அளித்துள்ளார். அதில் அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் உள்ள மொத்த தொகையும், முதல் நாளிலேயே முதலீட்டாளர்களால் செலவிடப்படும் என நினைப்பது குழந்தைத்தனமானது என தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசின் தரவுகளின்படி, வேகமாக வளர்த்து வரும் மாநிலமாக TN அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!