News November 24, 2024

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு

image

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. ‘ப.பாண்டி’, ‘ராயன்’ படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கும் இப்படத்தில், அவரது சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ் உள்பட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், கடைசி நாள் படப்பிடிப்பு புகைப்படம் வெளியாகியுள்ளது.

Similar News

News December 1, 2025

சென்னை: ஊர்க்காவல் படையில் சேர நல்வாய்ப்பு!

image

சென்னை , பெருநகர ஊர்காவல் படைக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வயது 18-50-க்குள் இருக்கும் ஆண்,பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். தகுதி உடையவர்கள், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஊர்காவல் படை தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று, டிச.15க்குள் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு, 91760 99249 / 74186 81700 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!

News December 1, 2025

சமந்தாவின் கணவர்.. யார் இந்த ராஜ் நிடிமொரு?

image

<<18437853>>சமந்தாவை<<>> கரம் பிடித்துள்ள ராஜ் நிடிமொரு திருப்பதியில் பிறந்தவர். இயக்குநர் DK உடன் இணைந்து பாலிவுட்டில் பல வெற்றி படங்களை ராஜ் இயக்கியுள்ளார். 2009-ல் ’99’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த ராஜ், தொடர்ந்து ‘Go Goa Gone’, ‘A gentleman’ போன்ற படங்களை இயக்கினார். சமந்தா நடித்த ‘The Family man’ சீரிஸ், ‘Citadel: Honey Bunny’ போன்ற வெப் தொடர்களும் அவர் இயக்கியதுதான்.

News December 1, 2025

நெல் ஈரப்பத அளவை TN அரசு உயர்த்த சொல்வது ஏன்?

image

மத்திய அரசின் தரக்குறியீட்டின்படி, நெல் கொள்முதலுக்கான ஈரப்பதம் 17% இருக்கவேண்டும். ஆனால், தற்போது பருவமழை காலம் என்பதால் குறுவை நெல்லின் ஈரப்பதம் 17% விட அதிமாக இருக்கும். நிர்ணயிக்கப்பட்ட அளவை விட நெல் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் அது தரமற்றதாக கருதப்படும். எனவே விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் ஈரப்பத அளவை 22% வரை உயர்த்த TN அரசு கோரிக்கை வைத்துவருகிறது.

error: Content is protected !!