News August 16, 2025
கிருஷ்ணர் தலையில் மயில் இறகு இருக்கும் ரகசியம்!

வனவாசத்தின் போது, தாகத்தால் தவித்த சீதைக்கும், ராமருக்கும் மயில் ஒன்று உதவ முன்வந்தது. நீர் இருக்கும் இடம் வெகுதூரம் என்பதாலும், அடர்ந்த காடு என்பதாலும், அவர்கள் வழி தவறி போய்விட கூடாது என்பதற்காக தனது இறகை உதிர்த்துக் கொண்டே சென்றது மயில். நீர் நிலையை ராமர் அடைந்த போது, மயில் இறந்து கிடப்பதை பார்த்தார். அதன் தியாகத்திற்காக, கிருஷ்ணர் அவதாரத்தில் தலையில் மயிலிறகை சூடிக் கொண்டார் என்பது ஐதீகம்.
Similar News
News March 5, 2026
லோனில் பைக் / கார் வாங்குபவர்களுக்கு நற்செய்தி!

லோனில் பைக் அல்லது கார் வாங்கும்போது, RC புக்கில் கடன் கொடுத்த வங்கி/ நிதி நிறுவத்தின் பெயர் இருக்கும். லோன் கட்டி முடித்த பின்னரே இதை மாற்ற முடியும். இதற்கு நீங்கள் வங்கிக்கும், RTO-க்கும் அலைய வேண்டிய நிலை இருந்தது. இனி அதற்கு அவசியமில்லை. லோன் செலுத்தி முடித்த உடனே, ஆன்லைனில் தானாகவே RC-ல் அப்டேட் செய்யப்படும். இது தற்போது சோதனை முறையில் உள்ளது. விரைவில் விரிவுப்படுத்தப்படும்.
News March 5, 2026
டைம் ஓவர்.. பாதியிலேயே கிளம்பிய ரயில் டிரைவர்

பிஹாரில் ஒரு லோகோ பைலட் தனது பணி நேரம் முடிந்துவிட்டதாக ரயிலை பாதியிலேயே நிறுத்திச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. மால்டா-சிலிகுரி சென்ற ரயில் நேற்று மதியம் தாக்குர்கஞ்ச் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது லோகோ பைலட் தனது 9 மணி நேர ஷிப்ட் முடிந்துவிட்டதாக கூறி ரயிலை மேலும் இயக்க மறுத்துவிட்டார். இதனால் பயணிகள் 3 மணி நேரம் சிக்கித் தவித்தனர். மேலும், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
News March 5, 2026
மாணவர்களுக்கு ₹4,000.. வந்தாச்சு HAPPY NEWS

ஊரகப் பகுதியில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வுத் தேர்வு நடத்தி TN அரசு கல்வி உதவித் தொகை (100 மாணவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு தலா ₹1,000) வழங்கி வருகிறது. இந்தாண்டுக்கான தேர்வு முடிவுகள் ஜன.20-ல் வெளியானது. தற்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை www.dge.tn.gov.in இணையதளத்தில் அரசு வெளியிட்டுள்ளது. மாணவர்களின் தகுதியை உறுதி செய்த பின் உதவித் தொகை வழங்கப்படும்.


