News August 18, 2024

ஆற்றில் மாயமானரின் உடலை தேடும் பணி நாளை தொடரும்  

image

கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் இன்று (ஆக.18) மதியம் மீன் பிடிக்கும் போது தவறி விழுந்து நீரில் மூழ்கிய 24 வயதான பேட்டையைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்ற வாலிபரை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். மாலை 6.30 மணி ஆகியும் வாலிபரின் உடல் கண்டெடுக்கப்படவில்லை. இந்தநிலையில், மீட்பு பணிகள் நாளை காலை 6.30 மணிக்கு தொடரும் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Similar News

News December 1, 2025

நெல்லை: குளத்தில் பெண் சடலம் மீட்பு

image

பாளையங்கோட்டை அடுத்த மேலப்பாக்கம் பகுதியில் பச்சேரி குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் இன்று அடையாளத்தை தெரியாத பெண் சடலம் மிதப்பதாக தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் தீயணைப்புத் துறை அங்கு சென்று அந்த பெண் சடலத்தை மீட்டனர். உடல் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News December 1, 2025

நெல்லை: உங்க PHONE-ல் இந்த எண்கள் இருக்கிறதா?

image

நெல்லை மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்க
திருநெல்வேலி (ம) – 0462-250761
பாளையங்கோட்டை – 9445000381
அம்பாசமுத்திரம் – 9445000386
நாங்குநேரி – 9445000387
இராதாபுரம் – 9445000388
மானூர் – 9445796458
சேரன்மகாதேவி – 9445796459
திசையன்விளை – 9499937025
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News December 1, 2025

நெல்லை: நூலிழையில் உயிர் தப்பிய தொழிலாளி

image

தச்சநல்லூர் தேநீர் குளத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி பேச்சிமுத்து (42). இவரை முன் பகை காரணமாக நேற்று தச்சநல்லூரை சேர்ந்த சங்கர் (38) என்பவர் தச்சநல்லூர் சாய்பாபா கோவில் அருகே வழிமறித்து அருவாளால் வெட்டிக் கொல்ல முயன்றார். அவர் தப்பியோடி சென்று அளித்த புகாரின் படி தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து சங்கரை கைது செய்தனர்.

error: Content is protected !!