News August 18, 2024
ஆற்றில் மாயமானரின் உடலை தேடும் பணி நாளை தொடரும்

கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் இன்று (ஆக.18) மதியம் மீன் பிடிக்கும் போது தவறி விழுந்து நீரில் மூழ்கிய 24 வயதான பேட்டையைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்ற வாலிபரை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். மாலை 6.30 மணி ஆகியும் வாலிபரின் உடல் கண்டெடுக்கப்படவில்லை. இந்தநிலையில், மீட்பு பணிகள் நாளை காலை 6.30 மணிக்கு தொடரும் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 7, 2025
நெல்லை: தாய் இறந்த துக்கம் தாளாமல் மகன் தற்கொலை

விகேபுரம் அருகே சிவந்திபுரத்தை சேர்ந்த ஐடி ஊழியர் வேலாயுதம் (25). தாய் அமுதவள்ளியை இழந்து மனமுடைந்த அவர், மது பழக்கத்திற்கு அடிமையானார். இந்நிலையில், நேற்று வீட்டில் துர்நாற்றம் வீசியதால், விகேபுரம் போலீசார் கதவை உடைத்து சென்ற போது, வேலாயுதம் மின் விசிறியில் தூக்கிட்டு அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தாய் இறந்த சோகத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News December 7, 2025
நெல்லை: இனி வரிசைல நிக்காதிங்க.. எல்லாமே ONLINE!

நெல்லை மக்களே, இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு போய் நீண்ட நேரம் வரிசைல நின்னு காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி நீங்க இங்கு <
News December 7, 2025
நெல்லை: இளைஞரிடம் ரூ.24 லட்சம் நூதன மோசடி

நெல்லை சந்திப்பு பகுதியை சேர்ந்த விஜயசுந்தர் (30), மேட்ரிமோனி தளத்தில் அறிமுகமான அகல்யா சேகர் மூலம் ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபட்டு முதலில் ரூ.10,000 முதலீடு செய்து லாபம் ஈட்டியுள்ளார். இந்த நம்பிக்கையில் அடுத்தடுத்து ரூ.24.05 லட்சம் செலுத்தினார். பணத்தை திரும்ப எடுக்க முயலும்போது மேலும் பணம் கேட்டதால் ஏமாற்றம் அடைந்து நெல்லை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்து விசாரணை.


