News August 18, 2024

ஆற்றில் மாயமானரின் உடலை தேடும் பணி நாளை தொடரும்  

image

கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் இன்று (ஆக.18) மதியம் மீன் பிடிக்கும் போது தவறி விழுந்து நீரில் மூழ்கிய 24 வயதான பேட்டையைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்ற வாலிபரை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். மாலை 6.30 மணி ஆகியும் வாலிபரின் உடல் கண்டெடுக்கப்படவில்லை. இந்தநிலையில், மீட்பு பணிகள் நாளை காலை 6.30 மணிக்கு தொடரும் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Similar News

News November 21, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (நவ.21) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் கண்ணதாசன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News November 21, 2025

நெல்லை: பாலியல் வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டு சிறை

image

நெல்லை இடிந்தகரையை சேர்ந்த அரவிந்தன் (33) என்பவர் கடந்த 2018ல் அதே ஊரைச் சேர்ந்த பெண்மணி ஒருவரை அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் கூடங்குளம் போலீசார் அரவிந்தனை கைது செய்தனர். இவ்வழக்கில் மாவட்ட மகிளா நீதிபதி ராமலிங்கம் இன்று அரவிந்தனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

News November 21, 2025

நெல்லை மக்களே இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.நெல்லை – 9445000380
2.பாளை – 9445000381
3.நாங்குநேரி- 9445000387
4.ராதாபுரம்- 9445000388
5.அம்பை- 9445000386
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!