News August 18, 2024

ஆற்றில் மாயமானரின் உடலை தேடும் பணி நாளை தொடரும்  

image

கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் இன்று (ஆக.18) மதியம் மீன் பிடிக்கும் போது தவறி விழுந்து நீரில் மூழ்கிய 24 வயதான பேட்டையைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்ற வாலிபரை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். மாலை 6.30 மணி ஆகியும் வாலிபரின் உடல் கண்டெடுக்கப்படவில்லை. இந்தநிலையில், மீட்பு பணிகள் நாளை காலை 6.30 மணிக்கு தொடரும் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Similar News

News December 4, 2025

நெல்லை: Ex ராணுவ வீரரை சரமாரியாக தாக்கிய தந்தை, மகன்

image

விகேபுரம் அருகே முதலியார்பட்டியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் செல்வம் (47) என்பவரை, இடப் பிரச்னை காரணமாக அதே ஊர் தர்மர் மற்றும் அவரது மகன் ஆதிலட்சுமணன் (27) ஆகியோர் நேற்று சரமாரியாகத் தாக்கினர். படுகாயமடைந்த செல்வம் நெல்லை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விகேபுரம் போலீசார் தர்மர் மற்றும் ஆதிலட்சுமணனை கைது செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

News December 4, 2025

திருநெல்வேலி மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை..!

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச 4) நெல்லை, ராமநாதபுரம்,. தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News December 4, 2025

மாநகரில் இன்று இரவு காவல் பணி அதிகாரிகள் விவரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (டிச.3) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விவரம், காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!