News August 18, 2024
ஆற்றில் மாயமானரின் உடலை தேடும் பணி நாளை தொடரும்

கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் இன்று (ஆக.18) மதியம் மீன் பிடிக்கும் போது தவறி விழுந்து நீரில் மூழ்கிய 24 வயதான பேட்டையைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்ற வாலிபரை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். மாலை 6.30 மணி ஆகியும் வாலிபரின் உடல் கண்டெடுக்கப்படவில்லை. இந்தநிலையில், மீட்பு பணிகள் நாளை காலை 6.30 மணிக்கு தொடரும் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 13, 2025
நெல்லை: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

திருநெல்வேலி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (0462-2580908) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க
News December 13, 2025
நெல்லை பயணிகள் கவனத்திற்கு.. ரயில்கள் பகுதி தூரம் ரத்து

தூத்துக்குடி ரயில்வே நிலையத்தில் டிச.15 முதல் பிட்லைன் மற்றும் இன்டர்லாக்கிங் பணிகள் தொடங்க உள்ளது. இதனால், பல ரயில்கள் பகுதி மற்றும் முழு ரத்து செய்யப்பட்டுள்ளது. பாலருவி எக்ஸ்பிரஸ் டிச.15 – ஜன.28 வரை நெல்லை – தூத்துக்குடி இடையே ரத்து. மைசூரு எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவை வாஞ்சிமணியாச்சி வரை மட்டும் இயங்கும். பல பாசஞ்சர் ரயில்களும் டிச.17 முதல் டிச.23 வரை ரத்து செய்யப்பட்டுளளது.
News December 13, 2025
நெல்லை: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

திருநெல்வேலி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1.<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!


