News April 3, 2024
தமிழகத்தில் பொளந்து கட்டும் வெயில்

தமிழ்நாட்டின் ஈரோடு மாநகரில் இன்று 41.2 டிகிரி வெயில் பதிவாகி மக்களை வாட்டி வதைத்தது. கரூர் பரமத்தியில் 41 டிகிரி, தர்மபுரியில் 39.8 டிகிரி, திருச்சி 39.7 டிகிரி, மதுரை 39.5 டிகிரி, திருப்பத்தூர் 39.4 டிகிரி, சேலம் 39.2 டிகிரி என அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. சென்னையில் 38.2 டிகிரி வெப்பம் பதிவானது. ஊட்டியில் 27.9 டிகிரியும் கொடைக்கானலில் 21.8 டிகிரியும் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது.
Similar News
News November 1, 2025
தமிழக மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்கணும்: SPK

பிஹார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக பொய்யான தகவலை பரப்பிய மோடி, தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என செல்வப்பெருந்தகை (SPK) வலியுறுத்தியுள்ளார். தேர்தல் லாபத்துக்காக தமிழக மக்களை பழித்துக் கூறுவது ஜனநாயகத்துக்கு எதிரானது; தமிழர்கள் உழைப்பும் அறிவும் இணைந்த மக்களாக உலகம் முழுவதும் மரியாதை பெற்றவர்கள்; அப்படி இருக்கையில் தமிழர்கள் மீதான அவதூறு கருத்தை மோடி திரும்ப பெற வேண்டும் என்றார்.
News November 1, 2025
திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்: விஜய்

தமிழ்நாடு உருவாக காரணமான எல்லை போராட்ட தியாகிகளையும், ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்ட காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம் என விஜய் தெரிவித்துள்ளார். மேலும், திமுகவிடம் இருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம் எனவும் 2026-ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம் என்றும் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 1956 நவ.1-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 1, 2025
ஆந்திரா, கேரளா, கர்நாடகா பிறந்த தினம் இன்று!

மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பிறமொழி பேசும் பகுதிகள் பிரிந்து சென்ற நாள் இன்று. கேரளா, கர்நாடகா, ஆந்திரா அப்போது சென்னை மாகாணத்தோடு இணைந்தே இருந்தன. மொழிவாரி மாநிலங்கள் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அதன் எதிரொலியாக, 1956-ம் ஆண்டு நவ.1-ம் தேதி முதல் மொழிவாரி மாநிலங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள் உருவாயின.


