News April 28, 2025

ஆரஞ்ச் தொப்பியை தட்டித் தூக்கிய ‘ரன் மெஷின்’..!

image

ஐபிஎல் வந்தாலே கோலியின் ஆதிக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். அதிக ரன்கள் குவித்தவர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் தொப்பியை அவர் கைப்பற்றி அசத்தியுள்ளார். தற்போதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 443 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். சூர்யகுமார் யாதவ்(427), சாய் சுதர்சன்(417), பூரன்(404), மார்ஷ்(378) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இந்த சீசன் முடியும்போது ஆரஞ்ச் தொப்பியை யார் கைப்பற்றுவார்?

Similar News

News April 28, 2025

நான் ராஜினாமா செய்ய தயார்: செல்வப்பெருந்தகை சவால்

image

நீட் தேர்வை பாஜக தான் சட்டமாக கொண்டுவந்தது; காங்கிரஸ் இல்லை என்று காங்., கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இந்த சட்டம் காங்., ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என்று நிரூபித்தால், நான் ராஜினாமா செய்கிறேன் என்று சவால் விடுத்த அவர், பாஜக ஆட்சியில் என்று நிரூபித்தால் நீங்கள்( பாஜக எம்.எல்.ஏ.க்கள்) ராஜினாமா செய்ய தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.

News April 28, 2025

குரு பெயர்ச்சி: அதிர்ஷ்ட யோகம் பெறும் 5 ராசிகள்

image

வரும் மே 14-ல் குரு பகவான் மிதுன ராசிக்கு செல்வதால் நன்மைகள் பெறும் ராசிகள்: *மேஷம்: செல்வமும் மகிழ்ச்சியும் பெருகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். *கன்னி: தொழிலில் வெற்றி. வருமானம் உயரும். குடும்ப வாழ்க்கை சிறக்கும். *துலாம்: கல்வி மேம்படும். தொழில், வேலையில் முன்னேற்றம். *கும்பம்: குழந்தை மூலம் மகிழ்ச்சி, காதல் உறவு மேம்படும். வருமானம் உயரும். *மீனம்: தொழிலில் முன்னேற்றம், நிதிநிலை மேம்படும்.

News April 28, 2025

எந்தக் கட்சியில் இணைய போகிறார் காளியம்மாள்?

image

நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் புதிய கட்சியில் இணைவது குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள அவர், திமுக, அதிமுக, தவெக எனப் பல கட்சிகளிலிருந்து அழைப்புகள் வந்தது உண்மை தான். ஆனால், எந்தக் கட்சிக்கு செல்வது என்று இதுவரை முடிவெடுக்கவில்லை. மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் கட்சியில் இணைவேன். அந்த முடிவை மே மாத இறுதிக்குள் நிச்சயம் அறிவிப்பேன் எனக் கூறியுள்ளார்.

error: Content is protected !!