News March 24, 2025

6 நாட்களுக்கு பின் கலவரம் ஓய்ந்தது

image

மகாராஷ்டிராவில் அவுரங்கசீப் கல்லறையை அகற்றக் கோரி சில அமைப்புகள் தொடங்கிய போராட்டம் பின் கலவரத்தில் முடிந்தது. குறிப்பாக நாக்பூரில் கடந்த 17-ம் தேதி பெரும் வன்முறை வெடித்தது. இதனால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், பதற்றம் தணிந்துள்ளதாகவும், நிலைமை கட்டுக்குள் இருப்பதால் நாக்பூரில் ஊரடங்கு உத்தரவு முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்படுவதாகவும், முதல்வர் பட்னவிஸ் அறிவித்துள்ளார்.

Similar News

News March 26, 2025

பெண்கள் அதிகம் வேலை செய்யும் மாநிலம் எது?

image

ஒப்பந்த தொழில்களில், பெண்கள் அதிகம் வேலை செய்யும் மாநிலமாக மகாராஷ்டிரா (28.7%) முதலிடத்திலும், தமிழ்நாடு (14.2%) இரண்டாவது இடத்திலும் இருப்பது TeamLease நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தலைமைப் பொறுப்புகளை வகிக்கும் பெண்கள் விகிதம் 19% குறைந்துள்ளது. 46% பெண்கள் தொடக்கநிலை ஊழியர்களாக இருப்பதாகவும், வேலைவாய்ப்பின்மை 2.9%லிருந்து 3.2% அதிகரித்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

News March 26, 2025

அமித் ஷாவுடன் 2 மணிநேரமாக இபிஎஸ் பேச்சு!

image

டெல்லிக்கு இன்று சென்ற எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இரவு 8 மணியளவில் தொடங்கிய பேச்சுவார்த்தை, 2 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது. முதலில் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோருடன் அமித் ஷாவை சந்தித்த இபிஎஸ், தற்போது தனியாக அவருடன் பேசி வருகிறார். மரியாதை நிமித்தமான சந்திப்பு 2 மணி நேரமாகவா நீடிக்கும் என எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

News March 26, 2025

ரேஷன் அட்டைதாரர்களே.. உடனே பண்ணுங்க

image

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் கை ரேகையை பதிவு செய்ய வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் அட்டை ரத்தாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக கை ரேகைப் பதிவு நடைபெற்று வந்தாலும், இன்னும் பலர் பதிவு செய்யாமல் உள்ளனர். இதனையடுத்து, வரும் 31ஆம் தேதி அதற்கான கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உங்கள் ரேகை பதிவாகியிருக்கிறதா என்று செக் பண்ணிக்கோங்க.

error: Content is protected !!