News March 19, 2024
இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்படும்

நாட்டில் தற்போதுள்ள இடஒதுக்கீடு உச்சவரம்பான 50% நீக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ளது.. சமூக, பொருளாதார, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயப் பணிகளுக்கு ஜி.எஸ்.டி விலக்கு, 30 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப் பணி ஆகிய அம்சங்கள் காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ளன.
Similar News
News September 6, 2025
கழுத்து வலி பிரச்னையா? இது காரணமாக இருக்கலாம்!

தினமும் காலை எழுந்து கொள்ளும்போதே சிலர் கழுத்து வலியுடன் எழுவார்கள், அதற்கு அவர்கள் பயன்படுத்தும் தலையணை முக்கிய காரணம். தலையணை சரியாக இல்லையெனில், கழுத்து, தோள்பட்டை வலி, உடல் சோர்வு போன்றவற்றுடன் சேர்ந்து, தூக்கமின்மை பிரச்னைகளும் வர வாய்ப்புள்ளது. இதனால் எடை கூடுதல், மன அழுத்தம் ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் பிரச்னை வரும். மெல்லிய, சுத்தமான தலையணையே பயன்படுத்துங்கள்.
News September 6, 2025
நீரவ் மோடி, மல்லையாவை நாடு கடத்தும் பணிகள் மும்முரம்

நிதி மோசடி குற்றவாளிகளை நாடு கடத்தும் பணிகள் முன்னேற்றம் அடைந்துள்ளது. இது தொடர்பாக பிரிட்டன் அதிகாரிகள் குழு, சமீபத்தில் திஹார் சிறையில் ஆய்வு செய்தனர். நீரவ் மோடி, மல்லையா UK-க்கு தப்பியோடிய நிலையில், இந்திய சிறைகளின் நிலையை கருத்தில் கொண்டு அவர்களை நாடுகடத்துவதற்கு பிரிட்டன் கோர்ட் தயக்கம் காட்டியது. இந்நிலையில், சிறப்பு வசதி செய்து தருவதாக பிரிட்டன் குழுவிடம் இந்திய அரசு உறுதியளித்துள்ளது.
News September 6, 2025
GPay, Phonepe பணத்துக்கு சிக்கலா? உடனே இதை செய்க

Gpay, Phonepe-ல தவறான நபருக்கு பணம் அனுப்பிட்டா, அத காந்தி கணக்குல எழுதவேண்டிய அவசியமில்ல. இந்த சிம்பிள் வழிகள் மூலம் பணத்த திரும்பப் பெறலாம் ▶நீங்க பணம் அனுப்புன நபரை தொடர்புகொண்டு பணத்த திருப்பிக் கொடுக்கச் சொல்லுங்க ▶அந்நபர் மறுக்கும் பட்சத்தில் உங்களோட வங்கியில நீங்க முறையிடலாம் ▶புகார் கொடுத்தும் வேலை நடக்கலன்னா, NPCI-யோட இலவச எண் 1800-120-1740-க்கு அழைத்து புகாரளியுங்க. SHARE IT.