News March 19, 2024

இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்படும்

image

நாட்டில் தற்போதுள்ள இடஒதுக்கீடு உச்சவரம்பான 50% நீக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ளது.. சமூக, பொருளாதார, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயப் பணிகளுக்கு ஜி.எஸ்.டி விலக்கு, 30 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப் பணி ஆகிய அம்சங்கள் காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ளன.

Similar News

News December 9, 2025

புஸ்ஸி ஆனந்துக்கு புதுச்சேரி எஸ்பி எச்சரிக்கை

image

புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பில், பாஸ் இல்லாதவர்களையும் உள்ளே அனுமதிக்க புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் போலீஸிடம் வலியுறுத்தினர். அதற்கு, உங்களால் பலர் இறந்துள்ளனர், நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லாதீர்கள் என பெண் SP ஈஷா சிங் கறாராக கூற, அங்கிருந்து ஆனந்த் புறப்பட்டார். இதனால் பதற்றம் நீடிக்கும் நிலையில், இன்னும் சற்று நேரத்தில் விஜய் உரையாற்ற உள்ளார்.

News December 9, 2025

லஞ்சம் கேட்குறாங்களா? இந்த நம்பருக்கு உடனே அடிங்க

image

அரசு சேவையை பெற அரசு அலுவலகங்களை நாடும்போது, அங்குள்ள அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்களா? லஞ்ச ஒழிப்புத்துறையிடம் நீங்கள் புகாரளிக்கலாம். உடனடியாக 1064 / 1965 -க்கு அழைத்தோ அல்லது dvac@nic.in-க்கு மெயில் மூலமாகவோ புகாரளியுங்கள். புகாரளித்தவரின் தகவல்கள் ரகசியமாக காக்கப்படும். சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமான இன்று (டிச.9), லஞ்சத்துக்கு எதிராக துணிச்சலாக குரல் கொடுக்க அனைவரும் முன்வருவோம். SHARE.

News December 9, 2025

கடன்கள் தள்ளுபடி… அரசு வெளியிட்ட அறிவிப்பு

image

கடந்த 5 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் ₹6.15 லட்சம் கோடி வாராக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது என பார்லிமென்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலம் வரை வசூலிக்க முடியாமல் போகும் கடன்கள் வங்கி பதிவுகளில் இருந்து நீக்கப்படும். இதற்கு, லோன் காசை கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்பது அர்த்தமல்ல. வங்கிகள் தொடர்ந்து இக்கடன்களை திரும்பப் பெற முயற்சிகள் எடுக்கும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!