News December 14, 2024
மாநிலங்களவைத் தலைவர் நடுவர் போல இருக்க வேண்டும்

மாநிலங்களவைத் தலைவர் தன்கருக்கும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேக்கும் நேற்று அவையில் காரசார விவாதம் நடந்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, மாநிலங்களவைத் தலைவர் எந்த பக்கமும் சாயாத விளையாட்டுப் போட்டியில் வரும் நடுவர் போல இருக்க வேண்டும் என்று கூறினார். ஆனால், அவைத் தலைவர் நட்டா 15 நிமிடம் பேசுகையில், தங்களுக்கு பேச அனுமதி தரப்படுவதில்லை என்றும் அவர் சாடினார்.
Similar News
News March 5, 2026
சாமிக்கு ஓட்டு இல்லாததால் இப்படியா? கண்டித்த HC

கரூரில் உள்ள ஒரு கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டும் 6 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில், சாமிகள் ஏழை என்பதாலும், வாக்குரிமை இல்லை என்பதாலும் அரசு ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லையா என மதுரை HC கேள்வி எழுப்பியுள்ளது. ஆக்கிரமிப்பு செய்த வசதியானவர்களுக்கு வாக்குரிமை உள்ளதால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லையா என்றும் கேட்டுள்ளது.
News March 5, 2026
சற்றுமுன்: விலை கணிசமாக குறைந்தது

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. ₹100-க்கு 5 கிலோ வரை வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளிக்கும் இதே நிலைமைதான். மேலும், பீட்ரூட்(கிலோ ₹30), உருளைக் கிழங்கு (கிலோ ₹15), சுரைக்காய் (கிலோ ₹35) உள்ளிட்டவையும் விலை குறைந்துள்ளது. இதேபோல், திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களிலும் காய்கறி விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. உங்க ஏரியாவில் விலை எப்படி இருக்கிறது?
News March 5, 2026
பட்டா, சிட்டா ஆவணம்.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

பட்டா, சிட்டா, FMB ஆகியவற்றை ஒன்றாக பெறும் வகையில், ஒருங்கிணைந்த நில ஆவணம் வழங்கும் சேவையை TN அரசு தொடங்கியுள்ளது. eservices.tn.gov.in இணையதளத்தில் நிலம் சார்ந்த மாவட்டம், வட்டம், கிராமம் உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்து ஒருங்கிணைந்த ஆவணத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம். மேலும், நிலத்தின் உரிமை மாற்ற வரலாற்றை தெரிந்துகொள்ள உதவும் பட்டா மாறுதல் அறிக்கை சேவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. SHARE IT


