News October 25, 2025

தாய்லாந்து ராணி காலமானார்!

image

தாய்லாந்து முன்னாள் ராணி மதர் சிரிகிட்(93) காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே, உடல் நலக்குறைவால் அவர் பொது வாழ்வில் இருந்து விலகி இருந்தார். கிராமப்புற ஏழைகளுக்கு உதவவும், பாரம்பரிய கைவினைப் பொருள்களை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மதர் சிரிகிட் பல திட்டங்களைத் அந்நாட்டில் தொடங்கினார். இவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 12-ம் தேதி அன்னையர் தினமாக தாய்லாந்து முழுவதும் கொண்டாடப்படுகிறது. #RIP

Similar News

News October 25, 2025

இந்தியாவின் மிக பணக்கார ஸ்கூல்கள் இவைதான்!

image

கல்வியும், மருத்துவமும் நாட்டில் இலவசம் என்றாலும், குழந்தைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த பெற்றோர்கள் பெரும் பணத்தை செலவு செய்கின்றனர். அந்த வகையில், 2025 – 26 ஆண்டு கல்வி கட்டணத்தின் அடிப்படையில் நாட்டில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஸ்கூல்களின் பட்டியலை மேலே கொடுத்துள்ளோம். அவை என்னென்ன என அறிய போட்டோவை வலது பக்கமாக Swipe பண்ணி பாருங்க.

News October 25, 2025

₹1,000 மகளிர் உரிமைத்தொகை.. வந்தது புதிய அறிவிப்பு

image

வேலூர், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், தேனியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நிறைவடைந்துவிட்டது. அதேநேரம் இம்மாவட்டங்களில் நவ.14-க்குள் கலெக்டர் ஆபிஸில் மக்கள் குறை தீர்க்கும் நாளில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இதனிடையே, வரும் 28-ம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெறும் இடங்களின் விவரங்களை அறிய <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. SHARE IT.

News October 25, 2025

TN-ல் மழைக்கு 31 பேர் பலியாகியுள்ளனர்: KKSSR

image

தமிழகத்தில் அக்.1 முதல் 25-ம் தேதி வரை பெய்த மழைக்கு, 31 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் KKSSR தெரிவித்துள்ளார். உயர் அதிகாரிகளுடன், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, ‘மோன்தா’ புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். முகாம்கள் தயாராக உள்ளதாகவும், ஏரிகளின் நீர்மட்டத்தை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!