News March 30, 2024
கேழ்வரகு வழங்கும் திட்டம் தள்ளிப் போகிறது

ரேசன் அட்டைதாரர்களுக்கு மாதம் 2 கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீலகிரி போன்ற மலை மாவட்டங்களில் கேழ்வரகு வழங்கப்படுவது போல், தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்த அரசு முடிவு செய்திருந்தது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இந்த திட்டத்தை விரிவுப்படுத்த ஜூன் மாதத்திற்கு மேல் ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News February 8, 2026
ஆபரேஷன் சிந்தூர்.. இன்னும் பாகிஸ்தான் மீளவில்லை

கடந்தாண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் விமானப்படை தளங்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்தியா மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதல் நடந்து 10 மாதங்கள் கடந்த பிறகும் இதிலிருந்து பாகிஸ்தான் இன்னும் முழுமையாக மீளவில்லை. தாக்குதலுக்கு உள்ளான போலாரி விமானத் தளத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்த செயற்கைக்கோள் புகைப்படங்களை NDTV வெளியிட்டுள்ளது.
News February 8, 2026
பெண்கள் அதிகம் விரும்பும் 9 சேலைகள்!

சேலை வெறுமனே உடை மட்டும் அல்ல; அது, இந்திய பாரம்பரியத்தின் சின்னம். ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்துவமான நெசவுத்திறன், டிசைன்களில் சேலைகள் உருவாக்கப்படுகின்றன. அவை அந்த மண்ணின் பண்பாட்டை, கலாசாரத்தை பிரதிபலிக்கின்றன. இந்திய பாரம்பரியத்திற்கு அழகு சேர்க்கும் சேலை வகைகளை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. உங்களுக்கு பிடித்த சேலை எது?
News February 8, 2026
BREAKING: விஜய் பரப்புரைக்கு அனுமதி

இந்த ஆண்டில் முதல் நிகழ்வாக, சேலம் சீலநாயக்கன்பட்டியில் தவெக மக்கள் சந்திப்பை நடத்த விஜய்க்கு அனுமதி கிடைத்துள்ளது. பிப்.13, மதியம் 12 – 3 மணிக்குள் கூட்டத்தை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5,000 பேர் கலந்துகொள்வதற்கு அனுமதி கோரப்பட்ட நிலையில், அது ஏற்கப்பட்டுள்ளது. டிராபிக் ஜாம் இல்லாமல் நடத்த வேண்டும், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அனுமதி இல்லை போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.


