News February 25, 2025
பிரதமரின் ₹2,000 இன்னும் வரவில்லையா?

PM கிசான் திட்டத்தின் 19ஆவது தவணையான ₹2,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேற்று வரவு வைக்கப்பட்டது. இந்த தொகை இன்னும் கிடைக்கப்பெறாத விவசாயிகள், PM கிசான் இணையதளத்தில் Beneficiary List பக்கம் சென்று, உங்கள் விவரங்களைக் குறிப்பிட்டு GET Report என்பதை க்ளிக் செய்யவும். அதில் உங்கள் பெயர் இருந்தும், பணம் வரவில்லை என்றால், 1800-11-5526, 155261, 011-23381092, 23382401 எண்களில் புகார் அளிக்கலாம்.
Similar News
News February 26, 2025
சிவராத்திரி: பஞ்ச பூத ஸ்தலங்கள்

மகா சிவராத்திரியையொட்டி பஞ்ச பூத சிவ ஸ்தலங்களை சிலர் வழிபடுவதுண்டு. அவை [1] காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் (நிலம்) [2] திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் (நெருப்பு) [3] திருச்சி ஜம்புகேஸ்வரர் கோயில் (நீர்) [4] தில்லை நடராஜர் கோயில் (ஆகாயம்) [5] காளஹஸ்தி திருக்காளத்தி கோயில் (காற்று). இந்த கோயில்களில் தரிசனம் செய்தால், சிவன் அருள் முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
News February 26, 2025
மாநில உரிமையில் ஒன்று சேர வேண்டும்: சீமான்

அனைத்து கட்சி கூட்டம் தொடர்பான கேள்விக்கு, ‘மாநில உரிமை என்று வரும்போது எல்லோரும் சேர்ந்து நின்றுதான் ஆக வேண்டும்’ என சீமான் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. மேலும், தொகுதி மறுசீரமைப்பு பிரச்னையில் ஒருமித்த குரலாக எதிர்க்க வேண்டும் எனக்கூறிய அவர், சீர்த்திருத்தம் என்ற பெயரில் சீரழிப்பதை எப்படி ஏற்க முடியும் என கேள்வி எழுப்பினார்.
News February 26, 2025
ஏசி காற்றால் ஏற்படும் தீமைகள்

* ஏசி ரூமில் இருப்போரது உடலில் நீர் குறையும்
* ஏசி காற்று நேரடியாக உங்கள் தலையிலோ, முகத்திலோ பட்டால் தலைவலி ஏற்படலாம்
* ஏசியை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் சுவாசப் பிரச்னைகள் ஏற்படலாம்
* ஏசியின் குளிர்க்காற்று தசைகளை இறுகச்செய்து செயல்பட விடாது
* ஏசியின் அதிக குளிர் உங்களது உடல் சூட்டை குறைத்து தூங்க விடாமல் செய்யலாம்
* ஏசியால் உங்களது உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து ஜலதோஷம் உள்ளிட்டவை ஏற்படலாம்